• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 13, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

இது பொய்யால் உருவான அரசு என்பதை உணர்ந்துள்ள மக்கள் – நளின் பண்டார சாடல்..!

Thamil by Thamil
April 26, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
இது பொய்யால் உருவான அரசு என்பதை உணர்ந்துள்ள மக்கள் – நளின் பண்டார சாடல்..!
Share on FacebookShare on Twitter

“தமது கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தானே தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். இது பொய் கூறும் அரசு அல்ல, பொய்யால் உருவான அரசு என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “தற்போது பிராந்திய ஸ்திரத்திரத்தன்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான நிலவரங்கள் அயல் நாடுகளில் நிலவுகின்றன. எனவே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் தற்போதைய நிலைமையைப் பொறுமையாகவும், அமைதியாகவும் கையாள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். தற்போது ஐரோப்பிய நாடுகளிலும் யுத்த நிலைமையே காணப்படுகின்றது.

ஒருபுறம் இஸ்ரேல் – பலஸ்தீன் மோதல் இடம்பெற்று வரும் நிலையில், மறுபுறம் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் பொருளாதாரப் போர் ஆரம்பித்திருக்கின்றது.

ADVERTISEMENT

எனவே, ஆசிய பிராந்தியத்தை அமைதியாகப் பேண வேண்டியது சகல ஆசிய நாடுகளினதும் பொறுப்பாகும். அந்த வகையில் இவ்விரு நாடுகளும் அமைதியாகச் செயற்படுவதே முக்கியத்துவம் வாய்ந்தது.

அரசும் சர்வதேச நிலைமைகள் குறித்த புரிதலுடன் செயற்பட வேண்டும். தற்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் இடம்பெற்று வருகின்றன.

தமது கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெறமாட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தானே தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். இது பொய் கூறும் அரசு அல்ல, பொய்யால் உருவான அரசு என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.

தலதா வழிபாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்ட போதிலும், அரசால் அதற்கான முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. சனநெரிசலைக் கட்டுப்படுத்த முடியாது போயுள்ளது. இதன் காரணமாகவே ஜனாதிபதி மீண்டும் அங்கு சென்றிருக்கின்றார். அரசின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

கடந்த ஆட்சியாளர்கள் தலதா வழிபாட்டுக்குச் செல்லும் போது ஊடகங்களையும் அழைத்துச் செல்வதாக அன்று ஜே.வி.பி. விமர்சித்தது. ஆனால், இன்று அவர்களும் அதையே செய்கின்றனர்” என்று கூறியுள்ளார்.

Thamil

Thamil

Related Posts

மக்கள் குடியிருப்புகள் நடுவில் கள்ள மண் கடத்தல்; வடமராட்சி கிழக்கில் தொடரும் மண் கொள்ளை!

மக்கள் குடியிருப்புகள் நடுவில் கள்ள மண் கடத்தல்; வடமராட்சி கிழக்கில் தொடரும் மண் கொள்ளை!

by Sangeetha
May 13, 2025
0

யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் கள்ள மண் கடத்தல் தொடந்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும்...

கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தியே ஆட்சியமைக்கும்! – விஜித ஹேரத்

கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தியே ஆட்சியமைக்கும்! – விஜித ஹேரத்

by Sangeetha
May 13, 2025
0

''கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தியே ஆட்சியமைக்கும். ஐக்கிய மக்கள் சக்தி குறைவான ஆசனங்களை பெற்றுள்ளதோடு மாத்திரமின்றி, அக்கட்சியின் மேயர் வேட்பாளர் தொகுதியிலும் தோல்வி அடைந்துள்ளார்....

யாழில் கொடூரம்-பெற்ற பிள்ளைக்கு நஞ்சு கலந்து கொடுத்த தந்தை..!

யாழில் கொடூரம்-பெற்ற பிள்ளைக்கு நஞ்சு கலந்து கொடுத்த தந்தை..!

by Sangeetha
May 13, 2025
0

யாழ்ப்பாணத்தில் தனது சிறு பிள்ளையின் உணவில் கிருமிநாசினியை கலந்து உணவூட்டிய தந்தை தலைமறைவாகியுள்ளார். சிறு பிள்ளை தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறது. யாழ்ப்பாணம்- இளவாலை பொலிஸ்...

ரணில் போல் அநுரவுக்கு தற்றுணிவு கிடையாது – முன்னாள் அமைச்சர் விமல் விளாசல்

ரணில் போல் அநுரவுக்கு தற்றுணிவு கிடையாது – முன்னாள் அமைச்சர் விமல் விளாசல்

by Sangeetha
May 13, 2025
0

"இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அநுர அரசு பகிரங்கப்படுத்தும் என்ற நம்பிக்கை கிடையாது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா தொடர்பான ஒருசில விடயங்களில்...

லசந்த அழகியவண்ண அதிரடி அறிவிப்பு – 40 சபைகளில் எம்மால் ஆட்சியமைக்க முடியும்!

லசந்த அழகியவண்ண அதிரடி அறிவிப்பு – 40 சபைகளில் எம்மால் ஆட்சியமைக்க முடியும்!

by Sangeetha
May 13, 2025
0

"உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு ஏனைய கட்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு அப்பால், ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் நாம் ஆட்சியமைப்பது குறித்து அவதானம் செலுத்தியுள்ளோம். அந்தவகையில் 40 உள்ளூராட்சி சபைகளில்...

கொழும்பு மாநகர சபை ஆட்சி: கட்சிகள் இடையே தீவிர பேச்சுவார்த்தைகள்!

கொழும்பு மாநகர சபை ஆட்சி: கட்சிகள் இடையே தீவிர பேச்சுவார்த்தைகள்!

by Sangeetha
May 13, 2025
0

கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் பிரதான அரசியல் கட்சிகளில் தீர்க்கமான பேச்சுவார்த்தைகள் சில இந்த வாரம் இடம்பெறவுள்ளன. ஆளுங்கட்சியைப் போன்றே எதிர்க்கட்சிகள் பலவும் கொழும்பு மாநகர...

வவுனியா மாநகரசபையில் தமிழரசுக் கட்சி தோல்விக்கு சத்தியலிங்கத்தின் செயற்பாடே காரணம்-சிவமோகன் தெரிவிப்பு

வவுனியா மாநகரசபையில் தமிழரசுக் கட்சி தோல்விக்கு சத்தியலிங்கத்தின் செயற்பாடே காரணம்-சிவமோகன் தெரிவிப்பு

by Sangeetha
May 13, 2025
0

வவுனியா மாநகரசபையில் தமிழரசுக் கட்சி தோல்வியடைந்தமைக்கு சத்தியலிங்கத்தின் செயற்பாடே காரணம். அவர் அரசியலை நாகரிகமாக செய்யவில்லை என தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்....

யாத்திரை சென்ற பேருந்து  விபத்து – 20 பேர் வைத்தியசாலையில்!!

யாத்திரை சென்ற பேருந்து விபத்து – 20 பேர் வைத்தியசாலையில்!!

by Sangeetha
May 13, 2025
0

யாத்திரை சென்ற தனியார் பஸ் வீதியில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டி, அலதெனிய - யடிஹலகல பகுதியில் நேற்று திங்கட்கிழமை...

தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு எதிராக போட்டியிட மாட்டோம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு எதிராக போட்டியிட மாட்டோம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

by Sangeetha
May 13, 2025
0

பெரும்பாண்மையை பெறாத உள்ளுராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு எதிராக போட்டியிடப்போவதில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்....

Load More
Next Post
அதிகளவான சபைகளை ‘மொட்டு’ கைப்பற்றுமாம் – சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவிப்பு..!

அதிகளவான சபைகளை 'மொட்டு' கைப்பற்றுமாம் - சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவிப்பு..!

உள்ளூராட்சி வேட்பாளரின் கணவர் போலி ஆவணங்களுடன் சிக்கினார்..!

உள்ளூராட்சி வேட்பாளரின் கணவர் போலி ஆவணங்களுடன் சிக்கினார்..!

போதைப்பொருட்களுடன் 277 பேர் கைது..!

போதைப்பொருட்களுடன் 277 பேர் கைது..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி