பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்துக்கு விஜயம் செய்து மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸுக்கு இலங்கை அரசினதும் மக்களினதும் சார்பாக தனது இரங்கலைத் தெரிவித்தார்.
இதன்போது இரங்கல் புத்தகத்தில் கையொப்பமிட்டு, கத்தோலிக்க சமூகத்தின் ஆன்மீகத் தலைவரான திருத்தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர், இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க சமூகத்துக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்தின் அப்போஸ்தலிக் பிரதிநிதி மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ADVERTISEMENT



