• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 12, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

தமிழர் பிரதேசங்களில் வாக்குகளை சிதற வைப்பதற்காக முயற்சிகளை முன்னெடுக்கின்றார்கள் – இரா.சாணக்கியன் தெரிவிப்பு..!

Thamil by Thamil
April 25, 2025
in இலங்கை செய்திகள், மட்டக்களப்பு செய்திகள்
0 0
0
தமிழர் பிரதேசங்களில் வாக்குகளை சிதற வைப்பதற்காக முயற்சிகளை முன்னெடுக்கின்றார்கள் – இரா.சாணக்கியன் தெரிவிப்பு..!
Share on FacebookShare on Twitter

“அரசியல் தீர்வைக் கோரி வருவதை, முற்றாக அவ்வாறு ஒரு தேவை இல்லை. தமிழ் மக்கள் சில சலுகைகளுக்காக மாத்திரம் தான் அரசியல்வாதிகளை நாடுகின்றார்கள் அல்லது அரசியல் ரீதியான பிரச்சினைகள் இல்லை என்று சொல்லுவதற்காகவே தமிழர் பிரதேசங்களில் வாக்குகளை சிதற வைப்பதற்காக முயற்சிகளை முன்னெடுக்கின்றார்கள்” என இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சீலாமுனைப் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.மட்டக்களப்பு மாநகரசபைக்கு போட்டியிடும் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரிக்கும் வகையிலான கூட்டம் மற்றும் தேர்தல் அலுவலக திறப்பு நிகழ்வுகள் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றது.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட தமிழரசுக் கட்சியின் 11 ஆம் வட்டார சீலாமுனை, பெரிய உப்போடை மற்றும் சின்ன உப்போடை வேட்பாளர் த.நடராசா சுதர்சன் தலைமையில் சீலாமுனையில் நடைபெற்றது. இதன்போது மக்களுடனான சந்திப்பு நடைபெற்றதுடன் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வும் வழங்கப்பட்டது. இதே போன்று தமிழரசுக்கட்சியின் கறுப்பங்கேணி,ஜெயந்திபுரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 06 ஆம் வட்டார வேட்பாளர் புஸ்பராஜா தனுஸபிரதீப் அவர்களின் தேர்தல் அலுவலகம் நேற்று மாலை திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளில் பிரதம அதிதியாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் மாவட்ட கிளைத் தலைவருமான இரா.சாணக்கியன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

ADVERTISEMENT

இதன்போது கருத்து தெரிவித்த சாணக்கியன்,” இந்த நாட்டிலே தமிழ் மக்கள் நிரந்தரமான அரசியல் தீர்வு தேவை இல்லை. தமிழ் மக்கள் சில சலுகைகளுக்காக மாத்திரம் தான் அரசியல்வாதிகளை நாடுகின்றார்கள் அல்லது அரசியல் ரீதியான பிரச்சினைகள் தமிழ் மக்களுக்கு இல்லை என்று சொல்லுவதற்காகவே தமிழர் பிரதேசங்களில் வாக்குகளை சிதற வைப்பதற்கான முயற்சியாக ஜனாதிபதியும், பிரதமரும் செயற்பட்டு வருவதாக” இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

“இந்தச் சந்திப்பிலே நாங்கள் அறியக்கூடியதாக இருந்தது மட்டக்களப்பு மாநகர சபைக்குள் தமிழரசு கட்சிக்கு இம்முறை மக்கள் ஆணையை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றார்கள். ஏன் என்றால் நாடாளுமன்றத்தில் 3 நாடாளுமன்ற பிரதிநிதிகளை வைத்துக் கொண்டு மக்களுடைய பிரச்சினைகளை சிறப்பாக முன்வைத்துக் கொண்டு வரும் கட்சி என்கின்ற அடிப்படையில், எங்களுடைய மக்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எங்களுடைய கட்சிக்கு உள்ளூராட்சி மன்றத்தினுடைய ஆதரவை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றார்கள்.

மிக முக்கியமாக உங்களுக்கு தெரியும் மாநகர சபையில் அதிகளவான வளங்கள் காணப்படுகின்றது. கடந்த 2023 ஆம் ஆண்டு மாநகர சபையினுடைய காலம் முடிவடைந்ததன் பின்னர் அந்த மாநகர சபைக்குள் இருந்த பல நிதிகளை எடுத்து முன்னாள் ராஜாங்க அமைச்சர்களாக இருந்த பிள்ளையான் போன்றோர் பல துஷ்பிரயோகங்கள் செய்திருந்தார்கள். இந்த மாநகர சபை எல்லைக்குள் இருக்கும் பல வளங்களை எடுத்து பல சட்ட விரோதமான செயல்கள் நடந்து இருக்கின்றன. உண்மையில் நாங்கள் இந்த விடயங்களை நேர்மையாக கடந்த 2018 ஆம் ஆண்டு தொடக்கம் 2023 ஆம் ஆண்டு வரை மட்டக்களப்பு மாநகர சபைக்குள் நான் நினைக்கின்றேன் மிக நேர்மையாக செயற்பட்ட உறுப்பினர்கள் என்றால் இலங்கை தமிழரசு கட்சி சேர்ந்த உறுப்பினர்கள் தான்.

உண்மையில் மாநகர சபை எல்லைக்குள் எதுவிதமான சட்டவிரோத செயல்களுக்கு அனுமதிகள் வழங்கவும் இல்லை, எதிர்வரும் மாநகர சபையிலும் வழங்கப் போவதும் இல்லை. எமது கட்சியைச் சேர்ந்தவர்கள், இந்த விடயங்களை பற்றி தெரிந்தவர்கள் இன்று சில கட்சிகளைப் பார்த்தீர்கள் என்றால் உறுப்பினர்களாக களம் இறங்கி இருப்பவர்களுக்கு, அவர்களுடைய வட்டாரங்களுக்குள் அவர்களையும் தெரியாது. வட்டாரத்தை பற்றி வேட்பாளர்களுக்கும் தெரியாது.

சில வேளைகளில் திசைகாட்டி சின்னத்துக்கு வாக்களிக்கின்ற மக்கள் கூறுகின்றார்கள், அனுரவுக்காக நாங்கள் திசைகாட்டிக்கு வாக்களிக்க முடியாது. நாளை தினம் ஒரு பிரச்சனை ஏற்பட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக சீலாமுனையில் அனுரகுமார திசாநாயக்க வந்து பார்க்கப் போவதில்லை. அத்தோடு அவர்களது வேட்பாளர்களுக்கும் இந்த பிரதேசத்தைப் பற்றி தெரியாது. அந்த வகையில் நாங்கள் இந்த மாநகர சபையில் இருக்கும் வளங்களைக் கொண்டு இந்த மாநகர சபையில் சிறந்த ஆட்சியை மேற்கொள்ள பல வளங்கள் காணப்படுகின்றன. சீலாமுனை பகுதியிலே சொல்லப்பட்ட ஒரு விடயம், இப்பகுதி ஆற்றங்கரை ஓரத்தைக் கொண்டு ஒரு சுற்றுலாத்தலமாக அபிவிருத்தி செய்வதான சிறந்த முன்மொழிவுகளை எமது வட்டார வேட்பாளர்கள் தெரிவு செய்திருக்கின்றார்கள். இந்த விடயங்களை எல்லாம் நாங்கள் நடைமுறைக்கு கொண்டு வந்தால், மாநகர சபை எல்லைக்குள் வருமானங்களை அதிகரிக்கக் கூடிய சில திட்டங்களாக அவற்றை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.

இதே வேளையில் தான் நாங்கள் மாநகர சபையில் எவ்வாறாவது எங்களுடைய மாநகர சபையில் தமிழரசுக் கட்சி தமிழ் தரப்பு நாங்கள், வடக்கு கிழக்கில் இருக்கின்ற நமது தமிழர் தாயகத்தில் இருக்கின்ற மக்களைத் தான் வாக்களிக்க கூறி வருகின்றோம். ஆனால் இன்று தேசிய கட்சிகளை பார்த்தீர்கள் என்றால் என். பி. பி கட்சியின் உடைய அமைச்சர்கள் 20 அமைச்சர்களில் =8 அமைச்சர்கள் இன்றைய நாளில் வடமகாணத்தில் இருக்கின்றார்கள் முல்லைத்தீவில் வட்டாரக் கூட்டங்களை அமைச்சர்கள் நடத்துகிறார்கள். சில இடங்களில் தேர்தலை முன்னிட்டு லஞ்சங்களாக சில வாக்குறுதிகள் வழங்கி வருகின்றார்கள்.

ஜனாதிபதி அதிகூடிய காலத்தை மலையகத்திலும், வடகிழக்கிலும் தான் இரண்டு வாரங்களை கழித்திருக்கின்றார். பிரதமர் வடக்கிலும், மலையகத்திலும் தான் கழித்திருக்கின்றார். இவர்களுடைய நோக்கம் என்ன என்றால் இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு தேசிய இன பிரச்சனை ஒன்று இல்லை. வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் என்பது இல்லை. மக்கள் சோறும் தண்ணியும் மாத்திரம் தான் மக்களுடைய பிரச்சினைகள் என்று, 76 வருடங்களாக இந்த நாட்டிலே எங்களுடைய தமிழ் மக்கள் நிரந்தரமான அரசியல் தீர்வைக் கோரி வருவதை, முற்றாக அவ்வாறு ஒரு தேவை இல்லை தமிழ் மக்கள் சில சலுகைகளுக்காக மாத்திரம் தான் அரசியல்வாதிகளை நாடுகின்றார்கள் அல்லது அரசியல் ரீதியான பிரச்சினைகள் இல்லை என்று சொல்லுவதற்காகவே தமிழர் பிரதேசங்களில் வாக்குகளை சிதற வைப்பதற்காக முயற்சிகளை முன்னெடுக்கின்றார்கள்.

தமிழ் மக்கள் இவ்விடத்தில் கவனமாக உணர்ந்து கொள்ள வேண்டும். அதே போன்று தான் உள்ளூராட்சி மன்றங்கள் என்பது மாகாணத்திற்கு பகிரப்பட்ட ஒரு விடயம். ஜனாதிபதியோ மத்திய அரசாங்கமோ இந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கப் போவது இல்லை. நான் நினைக்கின்றேன் முன்னாள் மாநகர சபை மேயர் அது தொடர்பாக மிக தெளிவாக கூறியிருக்கின்றார் அந்த வகையில் நமது மக்கள் இந்த தேர்தலில், இது வட்டாரத் தேர்தலையும் தாண்டி இது தமிழ் இனத்திற்கான ஒரு தேர்தலாக இதனை கருத்தில் எடுத்து இலங்கை தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

Thamil

Thamil

Related Posts

ராஜபக்சக்கள் கொள்ளையடித்த சொத்துக்களை அரசுடமையாக்குங்கள்..!

ராஜபக்சக்கள் கொள்ளையடித்த சொத்துக்களை அரசுடமையாக்குங்கள்..!

by Thamil
May 11, 2025
0

ராஜபக்சக்கள் கொள்ளையடித்த சொத்துக்களை அரசுடமையாக்குமாறு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரியுள்ளார். டுபாயில் எமக்கு சொந்தமானது என கூறப்படும் மரியோட் ஹோட்டலை அரசுடமையாக்குமாறும்,...

முள்ளிவாய்க்கால் தினத்தில் அஞ்சலி செய்து எங்களுக்கான தீர்வினை பெற்றுத்தர முன்வர வேண்டும்..!

முள்ளிவாய்க்கால் தினத்தில் அஞ்சலி செய்து எங்களுக்கான தீர்வினை பெற்றுத்தர முன்வர வேண்டும்..!

by Thamil
May 11, 2025
0

"முள்ளிவாய்க்கால் இன அழிப்பு வாரமானது எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 18 ஆம் திகதி வரை வடக்கு கிழக்கில் வலிந்து...

யாழ். கோப்பாய் வைத்தியசாலை ஊழியர் ஒருவர் உயிரிழப்பு..!

யாழ். கோப்பாய் வைத்தியசாலை ஊழியர் ஒருவர் உயிரிழப்பு..!

by Thamil
May 11, 2025
0

கோப்பாய் வைத்தியசாலையில் பணிபுரியும் சிற்றூழியர் ஒருவர் இன்றைய தினம் வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார். நீர்வேலி - பூதர்மட ஒழுங்கை என்ற முகவரியைச் சேர்ந்த குணரத்தினம் குணாதரன் (வயது...

யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணம்..!

யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணம்..!

by Thamil
May 11, 2025
0

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் திருமணமாகி ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் உறவினர்களின் வீட்டுக்கு சென்று திருமண விருந்து உண்டு விட்டு திரும்பிய கணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன்போது...

வீதியை விட்டு விலகி பள்ளத்தாக்கில் விழுந்த கார் ; மூவர் படுகாயம்..!

வீதியை விட்டு விலகி பள்ளத்தாக்கில் விழுந்த கார் ; மூவர் படுகாயம்..!

by Thamil
May 11, 2025
0

ஹட்டன் -கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை, கெரோலினா தோட்ட பகுதியில் இன்று (11) காலை ஒரு குடும்பத்தை ஏற்றிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் பற்றி ஜனாதிபதி வெளியிட்ட செய்தி..!

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் பற்றி ஜனாதிபதி வெளியிட்ட செய்தி..!

by Thamil
May 11, 2025
0

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இடம்பெற்ற போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செய்தி வெளியிட்டுள்ளார். இந்த முடிவு இரு தரப்பிலும் அப்பாவி உயிர்களைக்...

யாழில் ஆரம்பிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு..!

யாழில் ஆரம்பிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு..!

by Thamil
May 11, 2025
0

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எற்பாட்டில் தமிழின அழிப்பு வாரத்தினை முன்னிட்டு மே 18 முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் நிகழ்வானது நல்லூர் தியாக தீபம் நினைவிடம் முன்பாக...

தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா உறுப்பினர்களுடன் தேர்தலுக்கு பின்னரான கலந்துரையாடல்.!

தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா உறுப்பினர்களுடன் தேர்தலுக்கு பின்னரான கலந்துரையாடல்.!

by Mathavi
May 11, 2025
0

தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் இன்றையதினம் வவுனியாவில் நடைபெற்றது. தேர்தலுக்கு பின்னரான செயற்பாடுகள் தொடர்பாக சட்டத்தரணி மணிவண்ணன் தலைமையில்...

யாழில் இடம்பெற்ற “பேறுகால உளநலம்” நூல் வெளியீடு..!

யாழில் இடம்பெற்ற “பேறுகால உளநலம்” நூல் வெளியீடு..!

by Thamil
May 11, 2025
0

உலக அன்னையர் தினத்தினை முன்னிட்டு அரும்பு நிலையம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை இணைந்து வெளியிட்ட வைத்தியர் சிவசுப்பிரமணியம் சிவதாஸ் எழுதிய "பேறுகால உளநலம்" நூல் வெளியீடும்,...

Load More
Next Post
நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!

இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

இன்றைய ராசி பலன்கள்- 26.04.2025

யாழில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த பொலிஸ் உத்தியோகத்தர்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

யாழில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த பொலிஸ் உத்தியோகத்தர்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி