யாழ் வடமராட்சி கிழக்குப் பிரதேச செயலகத்தில் இன்று (25) காலை 9 மணியளவில் ஏல விற்பனை யாழ் மாவட்ட செயலகத்தின் அனுமதியுடன் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
இவ் ஏல விற்பனையில் வடமராட்சி கிழக்குப் பிரதேச செயலகத்தில் பாவித்து தற்போது பாவனைக்கு உட்படுத்த முடியாத பொருட்களான அச்சு இயந்திரங்கள், மர மேசைகள், கணினிகள், இலத்திரனியல் கருவிகள், கமராக்கள்,வாகன ரயர்கள் எனப் பல பொருட்கள் ஏலத்திற்காக விடப்பட்டது.
மேலும் இவ் ஏல விற்பனையில் வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் மட்டுமின்றி வெவ்வேறு இடங்களில் இருந்தும் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டு ஏலப் பொருட்களை கொள்வனவு செய்தனர்.
ADVERTISEMENT

