மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த கொழும்பு குற்றப் பிரிவின் முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா, ரூ.50,000 பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம W15 ஹோட்டலுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக திரு. நெவில் சில்வா இன்று (24) நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 8 சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மாத்தறை நீதவான் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கின் 9 வது சந்தேக நபராக நெவில் சில்வா உள்ளார்.