வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பாதுகாப்பற்ற நீர் குழியில் இருந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியான உடங்கா -02 பௌஸ் மாவத்தையில் நேற்று செவ்வாய்க்கிழமை(22) மாலை இடம்பெற்றுள்ளது.
மூன்று வயதுடைய முஹம்மத் லுக்மான் என்ற சிறுவனே நீர் குழியிலிருந்து இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
சுமார் 3 மணித்தியாலமாக காணாமல் சென்றிருந்த குறித்த சிறுவனை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து தேடிய நிலையில் சிறுவனின் வீட்டிற்கு அருகில் உள்ள வெற்றுக்காணியில் உள்ள பாதுகாப்பற்ற நீர் குழிக்குள் மரணமடைந்த நிலையில் சிறுவன் மீட்கப்பட்டுள்ளார்.
சிறுவனின் சடலம் தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




