ஊடகவியலாளர்களின் படு கொ லைகளுக்கும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் ஆவணங்களை சமர்ப்பித்தும் அதன் நீதியை நிலைநாட்டுவதில் அனுர அரசு பின் நிற்கின்றது என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார்.
ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு, கிழக்கு ஊடகவியலாளர்களை கையாள்வதற்கு அனுர அரசாங்கத்திற்கு நேரமில்லையா பதவிக்கு வந்தவுடன் எக்னெலிகொட , லசந்த உட்பட படு கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி பெற்று தருவேன், பாதிக்கப்பட்ட ஊடக நிறுவனங்களுக்கு நீதியை பெற்று தருவேன் என்றவர் தான் அனுர.
சுகிர்தராஜன், நிமலராஜன், சிவராம், நிலக்சன் என அனைத்து தமிழ் ஊடகவியலாளர்களதும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். நான் என்னுடைய கையால் எனது ஊடக நிறுவனத்திற்கு இடம்பெற்ற 40 சம்பவங்கள் குறித்து அவர் எமது நிறுவனத்திற்கு வந்து பொழுது கொடுத்தும் எந்தவித நன்மையும் இல்லை.
வடக்கு கிழக்கிலுள்ள எந்த ஊடகவியலாளர்களுக்கும் நீதி நிலைநாட்டப்படவில்லை. ஆனால் நாங்களும் பல தடவைகள் முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம். ஒரே எண்ணத்தில் உள்ளவர்களை உருவாக்க அரசு முயற்சிக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.