மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார். திருகோணமலையில் இன்று (21) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில் திருகோணமலை நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பில் பல விடயங்களை மேற்கொள்ளவுள்ள நிலையில் இவ்வாறான திட்டமிடப்படாத அபிவிருத்தி கோனேசர் கோவில் பகுதி உட்பட கரையோர பகுதிகளுக்கும் பாதக விளைவுகளை ஏற்படுத்தும் . குறித்த இந்த பத்தாண்டு திட்டமானது இதில் மூன்று விடயங்கள் பாதகமானது. கோத்தபாய காலத்தில் குறித்த பகுதியில் திட்டம் ஒன்றை முன்வைத்தார். அது நகர அபிவிருத்தி அதிகார சபையால் நிராகரிக்கப்பட்டது. ஏன் எனில் அந்தப் பகுதி தொல்பொருள் பகுதி மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை பகுதி என்பதால் வீடமைப்பு திட்டம் சாத்தியமாகாது .