ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்குள்ளான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு முன்பாக உயிர்த்த ஞாயிறு தற் கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 6 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
தேவாலயம் மூடப்பட்டுள்ளமை காரணமாக தேவாலயத்திற்கு முன்பாக உயிரிழந்தவர்களின் உறவுகள் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் மெழுகுவர்தி ஏற்றி மலர் வைத்து மௌன அஞ்சலி செலுத்தினர்.
அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் குண்டுவெடிப்பில் உயிரிழந்து மற்றும் படுகாயமடைந்து பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள், கட்சியின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
உயிரிழந்தவர்களின் உருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏற்றி 01 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
இந்த தற் கொலை குண்டு தாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன் 80 பேர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.




