• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 12, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியிடம் உள்ளூராட்சி அதிகாரம் : சட்ட விரோத ஆக்கிரமிப்புக்களுக்கே வழியமைக்கும். 

Mathavi by Mathavi
April 20, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
தேசிய மக்கள் சக்தியிடம் உள்ளூராட்சி அதிகாரம் : சட்ட விரோத ஆக்கிரமிப்புக்களுக்கே வழியமைக்கும். 
Share on FacebookShare on Twitter

தமிழ் மக்களை மீண்டும் ஒரு முறை ஏமாற்ற துடிக்கும் தேசிய மக்கள் சக்தியிடம் உள்ளூராட்சி மன்ற அதிகாரங்கள் செல்லுமாயின் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அனைத்து ஆக்கிரமிப்பு செயற்பாடுகளும் சட்ட ரீதியாக மாற்றப்படும் சூழலை தமிழ் மக்கள் கண்கூடாக பார்க்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வடமாகாண அமைப்பாளரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளருமான சுரேன் குருசாமி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக் காரியாலயத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் 9 உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவற்றை ஏற்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.

எமது கூட்டமைப்பின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை திட்டமிட்ட ஒரு செயற்பாடாகவே நாங்கள் பார்க்கின்ற நிலையில் அதற்கு எதிராக நீதிமன்றம் சென்று தீர்வைப் பெற்றுள்ளோம். உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக சங்கு சின்னத்தில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியானது பரந்துபட்ட கூட்டணி ஒன்றை அமைத்துள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தலில் சங்கு சின்னத்துக்கு மக்கள் வழங்கிய பேராதரவை உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் வழங்குவார்கள்.

ADVERTISEMENT

தேசிய மக்கள் சக்தியினர் வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களிடம் தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுத் தருகிறோம், அரசியல் கைதிகளை விடுவிக்கிறோம், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குகிறோம் மற்றும் படைகளிடம் உள்ள மக்கள் காணிகளை விடுவித்துத் தருகிறோம் என வாக்குறுதிகளை அள்ளி வழங்கி மூன்று ஆசனங்களைப் பெற்றார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் கடக்கின்ற நிலையில் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவுமில்லை, பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படவுமில்லை, பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படவுமில்லை. தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்பு பலாலி வீதியை மட்டும் நேர அட்டவணை விதித்து திறந்திருக்கிறார்கள்.

இந்த அரசாங்கத்தினுடைய செயற்பாடுகளை தமிழ் மக்கள் வெறுக்க ஆரம்பித்துள்ளவர்களை உள்ளூராட்சி மன்றங்களிலிருந்து தமிழ் மக்கள் விரட்ட வேண்டும். ஏனெனில் தமிழர் பகுதிகளில் சட்ட விரோத விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றது. மக்களுடைய நிலங்கள் தொடர்ந்தும் கையகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவற்றையெல்லாம் தடுப்பதற்கு உள்ளூராட்சி மன்ற அதிகாரங்கள் எங்களிடம் இருக்க வேண்டும்.மாறாக உள்ளூராட்சி மன்ற அதிகாரங்கள் தேசிய மக்கள் சக்தியிடம் செல்லுமாயின் சட்டவிரோத தையிட்டி விகாரை அமைக்கப்பட்டது சரிதான் என்று பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றுவார்கள்.

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திர மூர்த்தி தமக்கும் தையிட்டி விகாரைக்கும் சம்பந்தமில்லை என பிரச்சாரம் செய்து வருகிறார். அவரிடம் நான் கேட்கிறேன் தையிட்டி விகாரை சட்டவிரோத விகாரை எனப் பலரும் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் அந்த விகாரைக்குள் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் கடந்த மாதம் புதிதாக தியான மண்டபம் பெரும் எடுப்பில் திறந்து வைக்கப்பட்டதற்கு பதில் கூற முடியுமா?

சிங்கள தேசியவாதத்தை தமிழர் பகுதிகளில் விதைப்பதற்காக விலை பேசப்பட்ட சிலர் நாம் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கிறோம் என கூறிக் கொண்டு தமிழ் தேசியத்தை முற்றாக சிதைப்பதற்கான வேலை திட்டங்களில் இறங்கியுள்ளனர். அதன் ஒரு அங்கமாகவே உள்ளூராட்சி மன்ற அதிகாரங்களையும் கைப்பற்றி விட்டால் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியமாக பேரம் பேச முடியாத தமிழ் மக்களின் அடிமட்ட அரசியல் இலக்கான உள்ளூராட்சி மன்றங்களையும் அடிபணிய வைப்பதே அவர்களின் நோக்கம்.

தமிழ் மக்கள் நன்கு சிந்திக்க வேண்டும் சிங்கள தேசியவாதம் எவ்வாறு தமிழ் மக்களை பலவீனப்படுத்த முடியுமோ அந்தளவு தூரத்துக்கு நுட்பமாக இறங்கி தமிழ் மக்களின் வாக்குகளை கைப்பற்றிக் கொள்வதற்கான பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆகவே தமிழ் மக்கள் கடந்த தேர்தலில் சங்குச் சின்னத்துக்கு வழங்கிய பேராதரவை இம்முறை உள்ளூர் ஆட்சி மன்ற தேர்தலிலும் வழங்கி தமிழ் மக்களின் இலக்குகளை அடைய முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Mathavi

Mathavi

Related Posts

போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கைது..!

போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கைது..!

by Thamil
May 12, 2025
0

தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து இலங்கைக்கு வந்த பிரிட்டிஷ் பெண் ஒருவரால் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட குஷ் என்ற போதைப்பொருளின் ஒரு தொகுதியை சுங்க அதிகாரிகள் பறிமுதல்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணத்தை கொள்ளையிட்ட ஒருவர் கைது..!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணத்தை கொள்ளையிட்ட ஒருவர் கைது..!

by Thamil
May 12, 2025
0

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணி ஒருவரிடமிருந்து பறக்கும் விமானத்தில் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய சீனாவை சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான...

தேசிய மக்கள் சக்திக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்..!

தேசிய மக்கள் சக்திக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்..!

by Thamil
May 12, 2025
0

"அனைத்து அரசியல் கட்சிகளையும் திருடர்கள் என தெரிவித்த தேசிய மக்கள் சக்திக்கு எதிராக உள்ளூராட்சி மன்றங்களில் கட்சி சார்பற்று ஆட்சியமைக்க, அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்" என...

நாளை பல பகுதிகளில் வெப்பநிலை உயர்வு..!

நாளை பல பகுதிகளில் வெப்பநிலை உயர்வு..!

by Thamil
May 12, 2025
0

நாட்டின் பல பகுதிகளில் நாளை (13) வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்று (12) பிற்பகல் 3.30...

தமிழின அழிப்புக்கு நீதி கிடைக்க துணை நிற்கும் கனேடிய தேசத்திற்கு ஈழத் தமிழர்கள் சார்பாக நன்றி..!

தமிழின அழிப்புக்கு நீதி கிடைக்க துணை நிற்கும் கனேடிய தேசத்திற்கு ஈழத் தமிழர்கள் சார்பாக நன்றி..!

by Thamil
May 12, 2025
0

"முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் கனேடிய அரசாங்கமும், மக்களும் தொடர்ந்து முன்னெடுத்து வரும் சகல நடவடிக்கைகளையும் ஈழத் தமிழர்கள் பெரு...

இறம்பொடை பஸ் விபத்து ; பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு..!

இறம்பொடை பஸ் விபத்து ; பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு..!

by Thamil
May 12, 2025
0

நுவரெலியா - கண்டி பிரதான வீதியின் கொத்மலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இறம்பொடை - கெரண்டி எல்ல பகுதியில் நேற்று இடம்பெற்ற பஸ் விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை...

வெசாக் அலங்காரத்தில் ஈடுபட்ட சிறுமி மின்சாரம் தாக்கி மரணம்..!

வெசாக் அலங்காரத்தில் ஈடுபட்ட சிறுமி மின்சாரம் தாக்கி மரணம்..!

by Thamil
May 12, 2025
0

வெசாக் பண்டிகையை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் இணைந்து வீட்டை அலங்கரித்துக் கொண்டிருந்த சிறுமி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் களுத்துறை, மொரகஹஹேன பிரதேசத்தில் நேற்று...

விசுவமடு பகுதியில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் வழங்கப்பட்ட தானம்..!

விசுவமடு பகுதியில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் வழங்கப்பட்ட தானம்..!

by Thamil
May 12, 2025
0

வெசாக் பௌர்ணமி தினமான இன்று (12.05.2025) இராணுவத்தினரின் ஏற்பாட்டில் விசுவமடு சந்திப்பகுதியில் பனீஸ் மற்றும் தேனீர் தானம் வழங்கப்பட்டன. பெருமளவானோர் கலந்து கொண்டனர். பொதுச்சுகாதார பரிசோதகர்களின் மேற்பார்வையின்...

நுவரெலியாவை நோக்கிப் படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்.!

நுவரெலியாவை நோக்கிப் படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்.!

by Mathavi
May 12, 2025
0

தேசிய வெசாக் நிகழ்வு நுவரெலியாவில் நடைபெறுவதால் வருடம் தோறும் நடைபெறும் வெசாக் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் வெளிமாவட்டங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவிற்கு வருகை தருகின்றார்கள்....

Load More
Next Post
என்.பி.பி அரசு சட்டவிரோத கட்டடங்களை சட்டரீதியாக மாற்றும் அபாயம்…!

என்.பி.பி அரசு சட்டவிரோத கட்டடங்களை சட்டரீதியாக மாற்றும் அபாயம்...!

பணம் அனுப்பாததால் தவறான முடிவெடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

பணம் அனுப்பாததால் தவறான முடிவெடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

திருகோணமலையில் இடம்பெற்ற இரத்ததானம் மற்றும் தொற்றா நோய் விழிப்புணர்வு.

திருகோணமலையில் இடம்பெற்ற இரத்ததானம் மற்றும் தொற்றா நோய் விழிப்புணர்வு.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி