• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 12, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home நிகழ்வுகள்

இயேசுவின் உயிர்ப்பு நமக்கு நம்பிக்கையும் வெற்றியும் தருகிறது – ஆயர் ஞானப்பிரகாசம்

Sangeetha by Sangeetha
April 19, 2025
in நிகழ்வுகள்
0 0
0
இயேசுவின் உயிர்ப்பு நமக்கு நம்பிக்கையும் வெற்றியும் தருகிறது – ஆயர் ஞானப்பிரகாசம்
Share on FacebookShare on Twitter

இயேசுவின் உயிர்ப்பு சாவின் மேல் வாழ்வு பெற்றுக் கொண்ட வெற்றியை எடுத்துக் காட்டுகின்றது-மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை

இயேசுவின் உயிர்ப்பு மனுக்குலத்துக்கு ஒரு நம்பிக்கையை வழங்கியுள்ளது. இயேசுவின் உயிர்ப்பு நமக்கு ஆறுதலின் செய்தியைத் தருகிறது. அதாவது நமது பாடுகளின் பின்னால் நமக்கும் உயிர்ப்பு வெற்றி உண்டு என்பதே அச்செய்தி என மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மன்னார் மறைமாவட்ட ஆயர் விடுத்துள்ள உயிர்ப்பு பெருவிழா செய்தியில் மேலும் தெரிவிக்கையில்,

ADVERTISEMENT

ஈஸ்டர் பெருவிழா என்பது இயேசுவின் உயிர்ப்பை கொண்டாடும் விழாவாகும். இது கிறிஸ்தவர்களின் உயிர்நாடியான விழாவாகும். தவக்காலம் என்று சொல்லப்படுகின்ற நாற்பது நாட்கள் ஒறுத்தல், தவ முயற்சிகளை மேற்கொண்டு கிறிஸ்தவர்கள் தங்களை ஆன்மீக ரீதியில் ஆயத்தம் செய்து புனித வாரத்திற்குள் நுழைகின்றனர்.

இந்தப் புனித வாரத்தில் வரும் முக்கிய நாட்களான பெரிய வியாழன், பெரிய வெள்ளி, புனித சனி, உயிர்ப்பு ஞாயிறு ஆகியவை கிறிஸ்தவர்களின் விசுவாச வாழ்வில் ஒரு மிக முக்கியமான, புனிதமான நாட்களாகும்.

இயேசுவின் பாடுகள் மரணம், உயிர்ப்பு ஆகியவற்றை மிகுந்த பக்தி வணக்கத்தோடு இந்நாட்களில் கிறிஸ்தவர்கள் நினைவு கூறுகின்றனர். இயேசுவின் பாடுகள் மரணம், உயிர்ப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து ‘பாஸ்கா விழா’ என அழைக்கின்றனர். இயேசுவின் உயிர்ப்பு கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படையாகும்.

இயேசுவின் உயிர்ப்பு குறித்து புனித பவுல் குறிப்பிடும் போது, ‘கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் பொருளற்றதாகி விடும்’ என்கிறார். எனவே கிறிஸ்தவ சமயத்தின் அடிப்படையாக, அத்திவாரமாக, ஆணிவேராக இருப்பது இயேசுவின் உயிர்ப்பு நிகழ்வாகும். இயேசுவின் உயிர்ப்பில் தான் கிறிஸ்தவம் கட்டப்பட்டுள்ளது.

மனிதனின் அறிவியல் வளர்ச்சி எவ்வளவு உயர்ந்து சென்றாலும் மரணத்திற்குப் பின்னர் மனிதனுக்கு என்ன நடக்கிறது என்பதைக் குறித்து மனித அறிவியல் தெளிவான விளக்கத்தை இதுவரை தரவில்லை. ஆனால் கிறிஸ்தவ நம்பிக்கை அதற்குத் தெளிவான பதிலை தருகிறது.

அப்பத்தில் இயேசுவின் உயிர்ப்பை அடிப்படையாகக் கொண்டதாகும். இயேசுவின் உயிர்ப்பு சாவின் மேல் வாழ்வு பெற்றுக்கொண்ட வெற்றியை எடுத்துக்காட்டுகின்றது. கிறிஸ்தவ பாரம்பரியத்தில் கிறிஸ்துவின் உயிர்ப்பு என்பது சாவின் மேல் இயேசு ஏற்படுத்திய வெற்றியை வெளிப்படுத்துகின்றது. அத்துடன் இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் பெறக்கூடிய விண்ணக வாழ்வின் நம்பிக்கையை வழங்குகின்றது.

இயேசுவின் உயிர்ப்பு மனுக்குலத்துக்கு ஒரு நம்பிக்கையை வழங்கியுள்ளது. இயேசுவின் உயிர்ப்பு நமக்கு ஆறுதலின் செய்தியை தருகிறது. அதாவது நமது பாடுகளின் பின்னால் நமக்கும் உயிர்ப்பு, வெற்றி உண்டு என்பதே அச்செய்தி. இயேசுவின் பாடுகள் மரணத்தோடு அவருடைய வாழ்வு முற்றுப் பெறவில்லை. இயேசுவின் சீடர்கள் கூட ஆரம்பத்தில் அப்படித்தான் நினைத்தார்கள்.

நம்பிக்கை இழந்து நின்றார்கள். ஆனால் இயேசு இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார், வெற்றிவாகை சூடினார். நம்முடைய வாழ்வும் பாடுகள் நிறைந்த வாழ்வுதான். துன்பங்கள், போராட்டங்கள் நிறைந்த வாழ்வுதான்.

ஆனாலும் நாம் நம்பிக்கை இழக்கக்கூடாது, வாழ்க்கையில் விரக்தி அடையக்கூடாது. காரணம் இயேசு தனது துன்பத்தை, சிலுவைப் பாடுகளைக் கடந்து உயிர்ப்பின் வெற்றியை அடைந்தது போல, விண்ணேற்றமடைந்து மகிமை பெற்றதைப் போல, நாமும் வெற்றியை, மகிமையைப் பெறுவோம் என நம்புவதற்கு இயேசுவின் உயிர்ப்பு நமக்கு உறுதிப்பாட்டை தருகிறது.

உங்கள் அனைவருக்கும் எனது உயிர்ப்பு பெருவிழா வாழ்த்துக்கள்!அன்னை மரியாவின் வழியாக மருதமடு அன்னையின் பரிந்துரை ஊடாக உங்கள் அனைவரையும் இறைவன் நிறைவாக ஆசீர்வதிப்பாராக! என மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை விடுத்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Thinakaran
398 681.3K
  • Videos
  • Playlists
  • நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.  | Thinakaran news
    நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. | Thinakaran news 1 week ago
  • இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news
    இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news 1 week ago
  • யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news
    யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news 1 week ago
  • 412 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 1 year ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Sangeetha

      Sangeetha

      Related Posts

      தையிட்டி விகாரைக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.!

      தையிட்டி விகாரைக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.!

      by Mathavi
      May 12, 2025
      0

      தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் தையிட்டி விகாரைக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று வழங்கப்பட்டது. இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,...

      வவுனியாவில் இளங்கோவடிகளின் நினைவு நாள்.!

      வவுனியாவில் இளங்கோவடிகளின் நினைவு நாள்.!

      by Mathavi
      May 12, 2025
      0

      தமிழில் தோன்றிய முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகளார் சித்திரை முழுநிலா நாளில் நினைவு கூரப்படுகின்றார். அந்தவகையில் வவுனியா சின்னப்புதுக்குளம், சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள இளங்கோவடிகளின் திருவுருவச்...

      நாவாந்துறை கலைவாணி சனசமூக நிலையத்தின் பொன்விழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டி.!

      நாவாந்துறை கலைவாணி சனசமூக நிலையத்தின் பொன்விழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டி.!

      by Mathavi
      May 12, 2025
      0

      நாவாந்துறை கலைவாணி சனசமூக நிலையத்தின் 50வது பொன்விழாவை முன்னிட்டு அவர்கள் நடாத்திய விளையாட்டுப் போட்டியானது நேற்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அந்தவகையில் நேற்று முன்தினம் சைக்கிள் ஓட்ட...

      மூளாய் வதிரன்புலோ சித்திவிநாயகர் ஆலய இரதோற்சவம்.!

      மூளாய் வதிரன்புலோ சித்திவிநாயகர் ஆலய இரதோற்சவம்.!

      by Mathavi
      May 11, 2025
      0

      மூளாய் வதிரன்புலோ சித்திவிநாயகர் ஆலய இரதோற்சவமானது இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை 5 மணியளவில் கிரியைகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டப பூஜை...

      வவுனியாவில் சிறி சபாரட்ணம் அவர்களின் 39 ஆவது நினைவேந்தல் அனுஷ்டிப்பு.!

      வவுனியாவில் சிறி சபாரட்ணம் அவர்களின் 39 ஆவது நினைவேந்தல் அனுஷ்டிப்பு.!

      by Mathavi
      May 11, 2025
      0

      வவுனியாவில் சிறி சபாரட்ணம் அவர்களின் 39 ஆவது நினைவு தினம் நேற்று (10.05) அனுஷ்டிக்கப்பட்டது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் சிறி சபாரட்ணம் அவர்களின் 39...

      மிகவும் சிறப்பாக இடம்பெற்ற சென் பிலிப் நேரிஸ் ஆலய வருடாந்த முதல் நன்மை திருப்பலி.!

      மிகவும் சிறப்பாக இடம்பெற்ற சென் பிலிப் நேரிஸ் ஆலய வருடாந்த முதல் நன்மை திருப்பலி.!

      by Mathavi
      May 11, 2025
      0

      யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு சென் பிலிப் நேரிஸ் ஆலய வருடாந்த முதல் நன்மை திருப்பலி மற்றும் நிகழ்வுகள் நேற்று (10) சனிக்கிழமை ஆலயத்தில் ஆரம்பமானது....

      இன்று இடம்பெற்ற சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வுகள்..!

      இன்று இடம்பெற்ற சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வுகள்..!

      by Thamil
      May 9, 2025
      0

      யாழ்ப்பாணம் வடமராட்,சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் சந்நிதியான் ஆச்சிரமத்தால் வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் நடாத்தப்படுகின்ற நிகழ்வு ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ்...

      மட்டக்களப்பில் இடம்பெற்ற பரிசளிப்பு விழா..!

      மட்டக்களப்பில் இடம்பெற்ற பரிசளிப்பு விழா..!

      by Thamil
      May 4, 2025
      0

      மாநகரசபையும், மட்டக்களப்பு மாநகரசபை பொது நூலகமும் இணைந்து நடத்திய பொது அறிவு ஆணையளார் வெற்றிக்கிண்ணம் இறுதிப் பரிசளிப்பு விழா மாநகர சபை மண்டபத்தில் மாநகர ஆணையாளர் திரு.நா.தனஞ்ஜெயன்...

      வாழைச்சேனை மாதர் அபிவிருத்திப் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற கண்காட்சி..!

      வாழைச்சேனை மாதர் அபிவிருத்திப் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற கண்காட்சி..!

      by Thamil
      May 3, 2025
      0

      கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுசரனையில் இயங்கும் மாதர் அபிவிருத்திப் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற மாணவிகளின் கண்காட்சியும், டிப்ளோமா சான்றிதழ்...

      Load More
      Next Post
      சமாதிக்கு எதிராக உயிர்த்த நம்பிக்கை – அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார்

      சமாதிக்கு எதிராக உயிர்த்த நம்பிக்கை – அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார்

      யாழில் மனைவியை பிரிந்திருந்த குடும்பஸ்தர் நஞ்சருந்தி உயிர் மாய்ப்பு!

      யாழில் மனைவியை பிரிந்திருந்த குடும்பஸ்தர் நஞ்சருந்தி உயிர் மாய்ப்பு!

      கருணா, பிள்ளையானின் வெளியேற்றமே விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்குக் காரணம்.!

      கருணா, பிள்ளையானின் வெளியேற்றமே விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்குக் காரணம்.!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி