யாழ். கிராமிய உழைப்பாளர் சங்கம், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் ஆகியவற்றின் இணைந்த ஏற்பாட்டில் மரிய நாயகம் நியூட்டன் (நோர்வே) எழுதிய “காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்” நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று காலை யாழில் உள்ள மண்டபத்தில், யாழ் கிராமிய உழைப்பாளர் சங்க தலைவர் என்.இன்பம் தலைமையில் நடைபெற்றது.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அமைப்பாளர், உலக மீனவ சம்மேளன பொதுச்செயலாளர், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பொ.கஜேந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டு நூலினை வெளியிட்டு வைத்தனர்.
வடமாகாண கடற்றொழிலாளர் இணைய ஊடக பேச்சாளர் அ.அன்னராசா, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன், கிராமிய அமைப்பினர்கள், மீனவ சமூகத்தினர் என பலரும் இதில் கலந்துகொண்டனர்.








