முன்னாள் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் சண்முகம் ஜீவராசாவின் ஊடக சந்திப்பு ஒன்று இன்றைய தினம் 14 .04.2025 இடம்பெற்றது.
இதன் போது ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,
தமிழரசுக் கட்சியின் தற்போதைய செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் சுமந்திரன் அவர்களின் சதி முயற்சியின் காரணமாக தன்னைத் தமிழரசு கட்சியிலிருந்து முழுமையாக நீக்கி உள்ளதாகவும் இதன் காரணமாகவே தற்பொழுது சுயேட்சையாக பிரதேச சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த போதிலும் இளைஞர்களுக்கான சரியான அடையாளம் விடப்படவில்லை என்ற ஒரே காரணத்தினால் தமது வேட்புமனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக நீதிமன்றம் செல்ல பல லட்சம் ரூபாய் தன்னிடம் இல்லை. சில வேட்பாளர்கள் பல லட்சம் ரூபாய் பணத்தை செலவு செய்து வழக்குத் தாக்கல் செய்த அனைவருக்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சில அரசியல்வாதிகள் இத்தேர்தலில் போட்டியிடமுடியாத அளவுக்கு இந்த அரசாங்கம் சதித் திட்டமிட்டு செய்துள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பாக ஜனாதிபதியின் பார்வைக்குச் செல்லும் வரையில் தமக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரையில் ஓயப் போவதில்லை என கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகம் ஜீவராசா தெரிவித்துள்ளார்.