ஈஸ்டர் தாக்குதல் உட்பட பல கொ லைகளில் பிள்ளையானுக்கு பங்கு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சுரேஷ் சலே பிள்ளையானுக்கு வைப்பிலிட்ட 32 இலட்சம் ரூபா
மஹிந்தவின் 9 கோடி ரூபா குண்டு துழைக்காத கார் கருணாவுக்கு, ஈஸ்டர் தாக்குதல் உட்பட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷவின் காலத்தில் இடம் பெற்ற பல கொலைகள், குற்றச்செயல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷ, ரணில் விக்ரமசிங்க முன்னாள் அரச புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஷ் சலே முன்னாள் அமைச்சர் உதயகம்மன்பில உட்பட மேலும் சிலருக்கு தொடர்புகள் இருப்பதாக தற்போது கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையானின் வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளது.
2006 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண முன்னாள் கலைப்பீட பீடாதிபதி முன்னாள் துணைவேந்தர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோரின் கொலைகள் தொடர்பில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 9 கோடி ரூபா பெறுமதியான குண்டு துளைக்காத வாகனம் முன்னாள் அமைச்சர் கருணாவுக்கு வழங்கப்பட்டு இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பொலனறுவை சிங்கபுரவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் காலத்தில் இன்னொரு வதை முகாம் நடத்தப்பட்டு வந்ததாகவும், அரசியல் எதிரிகள் பலர் அங்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், சித்திர வதை செய்யப்பட்டதாகவும் பிள்ளையானின் வாக்குமூலத்திலிருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையானை காண்பதற்கு குற்றப் புலனாய்வு விசாரணை பிரிவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள போதிலும் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதே வேளை மேற்படி கொலை மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பில் ஒன்றுக்கு மேற்பட்ட முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட முன்னாள் முஸ்லிம் அமைச்சர் ஒருவரும் விரைவில் கைதாகலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.