தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ஆடைகளை கொள்வனவு செய்வதில் பொதுமக்கள் அதிகளவில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிந்தது.
தமிழ் சிங்கள புதுவருடப்பிறப்பை முன்னிட்டு கிளிநொச்சியில் வியாபாரம் களை கட்டியுள்ளது,
கிளிநொச்சி நகரின் கனகபுரம் பகுதியில் உள்ள புடவை வியாபார நிலையங்களில் அதிக சனநெரிசல்கள் எமது காமரக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
2025 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டானது நாளை திங்கட்கிழமை கொண்டாடப்படும் நிலையில் கிளிநொச்சி நகருக்கு அதிகளவிலான மக்கள் வருகை தந்து புத்தாடைகள், வெடிகள், இனிப்பு பண்டங்களை கொள்வனவு செய்ததை அவதானிக்க முடிந்தது.



