• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 9, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

பட்டலந்த வதை முகாம் விவகாரம்: சட்டத்தின் பிரகாரம் ரணிலுக்கு எதிராக உரிய நடவடிக்கை.!

Mathavi by Mathavi
April 11, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
பட்டலந்த வதை முகாம் விவகாரம்: சட்டத்தின் பிரகாரம் ரணிலுக்கு எதிராக உரிய நடவடிக்கை.!
Share on FacebookShare on Twitter

“ஜே. ஆர். ஜயவர்த்தன அதிகாரத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதைப் போன்றுதான் அவரது மருமகனான ரணில் விக்கிரமசிங்கவும் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தினார். அதன் பெறுபேறுதான் பட்டலந்த சித்திரவதை முகாமாகும். அவ்வாறிருக்கையில், 1988 மற்றும் 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களை எமது கணக்கில் வைப்பிலிடுவதற்கு ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கின்றார். எவரையும் பழிவாங்க வேண்டிய தேவை அரசுக்குக் கிடையாது . உண்மை நிச்சயம் வெளிவரும். சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” – இவ்வாறு பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

ADVERTISEMENT

“பட்டலந்த சித்திரவதை முகாமில் பல்கலைக்கழக மாணவர்கள், சட்டத்தரணிகள், தொழிற்சங்கவாதிகள் உட்படப் பலர் படுகொலை செய்யப்பட்டனர். இது வெறும் அறிக்கையல்ல, இலங்கையின் ஹிட்டலர் பற்றி இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் காலப்பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாதத்தை அரச பயங்கரவாதம் என்றே அழைக்க வேண்டும்.

பட்டலந்த வீட்டுத் தொகுதிக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இளைஞர்களின் இரத்தம் மற்றும் உடலை ரணில் விக்கிரமசிங்க நிலத்துக்கு உரமாக்கினார். இந்தச் சித்திரவதை முகாமைப் போன்று நாடு முழுவதும் அரச ஆதரவுடன் பல சித்திரவதை முகாம்கள் காணப்பட்டன. ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் சித்திரவதை முகாம்களுக்குத் தலைமை தாங்கினார்கள்.

உண்மைக்காகப் போராடியே பலர் உயிர்த் தியாகம் செய்தார்கள். அநீதியாகக் கொல்லப்பட்டவர்களுக்கு நிச்சயம் நீதியை நாங்கள் பெற்றுக்கொடுப்போம். பட்டலந்த விசாரணை அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முறையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பட்டலந்த விவகாரத்தை மக்கள் விடுதலை முன்னணிப் பக்கம் திருப்புவதற்கு ரணில் மேற்கொண்ட முயற்சிகள் அவருக்கே எதிராகத் திரும்பியுள்ளது.” – என்றார்.

Mathavi

Mathavi

Related Posts

சலுகைகளுக்காக வாக்களிப்பவர்கள் தமிழ் மக்கள் அல்ல..!

சலுகைகளுக்காக வாக்களிப்பவர்கள் தமிழ் மக்கள் அல்ல..!

by Thamil
May 8, 2025
0

"கசிப்பும் பணமும் கொடுத்து தமிழரசுக் கட்சி வாக்கு சேகரித்தது என்பதை அமைச்சர் விமல் ரத்நாயக்க நாடாளுமன்றுக்கு வெளியில் வந்து ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டவேண்டும்" என வலியுறுத்தியுள்ள இலங்கை...

யாழில் பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழப்பு..!

யாழில் பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழப்பு..!

by Thamil
May 8, 2025
0

யாழில் பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை நேற்றிரவு உயிரிழந்துள்ளது. நீர்வேலி தெற்கு, நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த விஜிகரன் கேனகா என்ற பிறந்து ஏழு நாட்கள் நிரம்பிய...

மனைவி பணம் கொடுக்காததால் இளம் குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு..!

மனைவி பணம் கொடுக்காததால் இளம் குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு..!

by Thamil
May 8, 2025
0

யாழில் போதைப்பொருள் பாவிப்பதற்கு மனைவி பணம் கொடுக்காததால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்றைய தினம் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். அராலி - வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த...

தனக்குத் தானே தீ வைத்த இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு..!

தனக்குத் தானே தீ வைத்த இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு..!

by Thamil
May 8, 2025
0

தீக் காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். மன்னார் - மடு பகுதியைச்...

வவுனியாவில் இளம் பெண் ஒருவர் உயிர்மாய்ப்பு..!

வவுனியாவில் இளம் பெண் ஒருவர் உயிர்மாய்ப்பு..!

by Thamil
May 8, 2025
0

வவுனியா இராசேந்திரகுளம் கிராமத்தில் நேற்றிரவு இளம் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் 24 வயதுடைய தவகுலசிங்கம் திவ்யா என்பவரே இவ்வாறு சடலமாக...

கொட்டாவையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு..!

கொட்டாவையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு..!

by Thamil
May 8, 2025
0

கொட்டாவை மலபல்லா பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்  இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மிரிஸ்ஸாய...

வடக்கில் 5,941 ஏக்கர் காணி அபகரிக்கும் வர்த்தமானியை மீளப்பெறுக..!

வடக்கில் 5,941 ஏக்கர் காணி அபகரிக்கும் வர்த்தமானியை மீளப்பெறுக..!

by Thamil
May 8, 2025
0

கோவணத்துடன் சென்றமக்களிடம் ஆவணம் கேட்கின்றீர்களா எனவும், கடந்தகால கொடுங்கோல் அரசுகளைப் பின்தொடர்கின்றீர்களா எனவும், சபையில் சரமாரியாகக் கேள்வி எழுப்பிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்,...

சிறையில் உள்ள கெஹெலியவிடம் கைப்பற்றப்பட்ட பொருட்கள்..!

சிறையில் உள்ள கெஹெலியவிடம் கைப்பற்றப்பட்ட பொருட்கள்..!

by Thamil
May 8, 2025
0

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தற்போது வெலிக்கடை சிறையில் விளக்கமறியலில் உள்ள நிலையில், அவரிடம் ஒரு “கஜமுத்து” (யானையின் தந்தம்) மற்றும் “ஸ்ரீ மகா போதி” மரத்தின்...

மாணவியைக் கடத்த முயன்ற நபருக்கு விடுக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு..!

மாணவியைக் கடத்த முயன்ற நபருக்கு விடுக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு..!

by Thamil
May 8, 2025
0

கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அருகே மாணவி ஒருவரைக் கடத்த முயன்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க...

Load More
Next Post
மஹிந்த, ரணிலை உங்களால் முடிந்தால் கைது செய்யுங்கள் – அநுர அரசுக்கு சாமர சம்பத் சவால்.!

மஹிந்த, ரணிலை உங்களால் முடிந்தால் கைது செய்யுங்கள் - அநுர அரசுக்கு சாமர சம்பத் சவால்.!

வரலாற்றில் இன்று பதிவாகிய பல சம்பவங்கள்.!

வரலாற்றில் இன்று பதிவாகிய பல சம்பவங்கள்.!

பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகம்; ஒருவர் காயம்.!

பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகம்; ஒருவர் காயம்.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி