2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் புத்தாண்டுக்குப் பின்னர் வெளியிடப்படும் என இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
பரீட்சை முடிவுகள் தொடர்பாக ஊடகங்கள் வினவியபோது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு 333,183 மாணவர்கள் தோற்றினார்கள். அவர்களில் 253,390 பேர் பாடசாலை மாணவர்கள். 79,793 பேர் தனியார் பரீட்சார்த்திகள் ஆவர்.
இந்த பரீட்சை 2024 நவம்பர் 25 முதல் டிசம்பர் 31 வரை நாடு முழுவதும் 2312 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றதுடன், உயர் தரப் பரீட்சையின் 66 பாடங்களுக்கான செயல்முறை பரீட்சையானது கடந்த பெப்ரவரி 08 தொடக்கம் 10 ஆம் திகதி வரை நடைபெற்றன.