கொழும்பு – கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யோக் வீதியில் பேருந்து மோதி உயிரிழந்த நபர் ஒருவரை அடையாளம் காண்பதற்குக் கோட்டை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
இந்த விபத்து கடந்த பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
45 முதல் 50 வயது மதிக்கத்தக்க 5 அடி உயரமுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்றும், அவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் கூறினர்.
இது தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் கோட்டை பொலிஸ் நிலையத்தின் 071 8591555 அல்லது 011 2323677 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.