தங்காலை – மாத்தறை பிரதான வீதியில் குடாவெல்ல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (06) பேருந்து மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடையவர் ஆவார்.
பேருந்து ஒன்றில் பயணித்த பெண் ஒருவர் பேருந்து தரிப்பிடத்தில் வைத்து குறித்த பேருந்திலிருந்து இறங்கி வீதியை கடக்க முற்பட்ட வேளையில் பேருந்து மோதி படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த பெண் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திக்வெல்லவில் இருந்து தங்காலை நோக்கிப் பயணித்த பேருந்தில் மோதியே இந்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சடலம் தங்காலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.