இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கைளை ஏற்று, தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை அரசாங்கம் விடுவித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொழும்புவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை பிரதமர் மோடி சந்தித்தார். இதன்போது பிரதமர் மோடிக்கும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கும் இடையே நடைபெற்ற விரிவான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இந்த விடுதலை இடம்பெற்றது.
ADVERTISEMENT