ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக வெளியிடுவதற்குப் பரீட்சைகள் திணைக்களம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பமான உயர்தரப் பரீட்சைகள் டிசம்பர் 20 ஆம் திகதி முடிவடைய இருந்த நிலையில் சீரற்ற வானிலை காரணமாக பிற்போடப்பட்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெற்றன.
இந்த உயர்தரப் பரீட்சைக்கு மொத்தமாக 3 இலட்சத்து 33 ஆயிரத்து 183 பரீட்சார்த்திகள் தோற்றினார்கள். இதில் பாடசாலை மாணவர்கள் 2 இலட்சத்து 53 ஆயிரத்து 380 பேரும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 79 ஆயிரத்து 795 பேரும் பரீட்சைக்கு முகங்கொடுத்தார்கள்.
எனவே, வருகின்ற ஏப்ரல் மாதத்துக்குள் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பரீட்சைகள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.