கண்டி, பேராதனை பகுதியில் இன்று அதிகாலை (31) முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்து வ்விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ADVERTISEMENT
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் இந்த விபத்தில் சிக்கியதாகவும், காயமடைந்த இருவரும் பேராதனை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
விபத்து தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.