நாட்டில் சட்டவிரோதமான நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கும், பாதுகாப்பை மென்மேலும் உயர்த்துவதற்கும், உறுதி செய்வதற்கும் 500 சிறப்பு அதிரடிப் படையினர் களமிறங்கப் போகின்றனர் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“தெற்கில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த 4 பொலிஸ் குழுக்களை நியமித்துள்ளோம். மேலும் அவ்வாறான விடயங்களைத் தவிர்க்கவே புதிய சிறப்பு அதிரடிப் படையினர் களமிறங்கப் போகின்றனர்.
ADVERTISEMENT
புதிய சிறப்பு படையினர் தங்களது பயிற்சிகளை விரைவில் முடித்துவிட்டு தங்களது பணிகளுக்குத் திரும்புவார்கள்.” – என்றார்.