இந்துமா சமுத்திரத்தின் முத்தாம் இலங்காபுரியில் கிழக்கு வங்கடலோரம் அமர்ந்திருந்து நாடி வரும் அடிவர்களுக்கு செல்வத்தை வாரிவளங்கும் கலயுகநாயகன் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் இராஜகோபுர நிர்மாண வேலைப்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் மூன்றாம் தளம் நிர்மாணிப்பு வேலைத்திட்டத்தின்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வானது இன்றையதினம் ஆலய குரு திரு.அங்குசநாத குருகளினால் பூசை வழிபாடுகளுடன் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இவ் நிகழ்வானது ஆலய வண்ணக்கர் திரு.வ.ஜயந்தன் தலைமையில் இடம்பெற்றது.
தம்பிலுவில்02ஐ சேர்ந்த மகாதேவா ஞானம்மா குடும்பத்தினரிகளின் நிதிப்பங்களிப்பில் மூன்றாம் தள நிர்மாணத்திற்கான அடிகல் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் ஆலய நிருவாகத்தினர் மற்றும் அவர்களின் நிதிப்பங்களிபாளர்களின் குடும்பத்தினர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





