மியன்மாரில் இன்று வெள்ளிக்கிழமை (28) 7.3 மற்றும் 6.4 ரிக்டர் அளவிலான இரண்டு தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக்கில் 7.3 ரிச்டர் அளவிலான பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
நிலநடுக்கத்தினால் மியன்மாரின் மண்டலேயில் உள்ள புகழ்பெற்ற அவா பாலம் இராவடி ஆற்றில் இடிந்து விழுந்ததாகவும், சாகைங் அருகே மையமாக இருந்த பாரிய நிலநடுக்கங்களால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
நிலநடுக்கங்களின் தாக்கம் அந்த அளவுக்கு அதிகமாக இருந்ததால், சுமார் 900 கி.மீ தொலைவில் உள்ள பாங்கொக்கை நிலநடுக்கம் உலுக்கியது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது.
தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் பூகம்பம் காரணமாக இடிந்துவிழுந்த கட்டிடத்திற்குள் 50க்கும் அதிகமானவர்கள் சிக்குண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாங்கொக்கின்சட்டுசாச் பாக்கில் இடிந்துவிழுந்த கட்டிடத்திற்குள்ளேயே இவர்கள் சிக்குண்டுள்ளனர். அதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர், 43 பேர் சிக்குண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


