கிழக்கு மாகாணத்தில் கடல் வளங்களை பயன்படுத்தி மீனவர்கள் அதிகளவான வருமானங்களை ஈட்டும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் அலுவலகத்திற்கு கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று (27) விஜயம் மேற்கொண்டு மீனவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
அமைச்சராக பதவி ஏற்றதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு முதல் தடவையாக விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் மீனவர்களின் குறை நிறைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.
இதன் போது மீனவ சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பாக அமைச்சரிடம் முன் வைத்தனைத் தொடர்ந்து குறித்த பிரச்சனைகளுக்கான தீர்வினை மிக விரைவாக பெற்றுத் தருவதாகவும், சட்டவிரோத மீன்பிடியை தடுத்து கடல் வளத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களின் அழைப்பின் போரிலேயே அமைச்சர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு மீனவர்களுடனான குறித்த கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
ஆற்றினை ஆளப்படுத்துதல், களப்பு இறங்குதுறை அமைத்தல், புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக கூடிய அளவிலான மீன்பிடி வசதிகளை ஏற்படுத்தவும், சட்டவிரோத மீன்பிடி வலைகளை தடுக்கும் முகமாகவும் பல கோரிக்கைகளும், ஆள் கடல் மீன் பிடி தொடர்பாகவும் இதன் போது மீனவர்களால் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் நீரியல்வள உதவி பணிப்பாளர் றுக்சான் குரூஸ், மற்றும் கடற் தொழிலாளர்கள், மீனவர் சங்கத் தலைவர்கள் என பலர் இதன் போது கலந்து கொண்டிருந்தனர்.




