இங்கிலாந்து கடற்கரையில் சிலர் நடந்து சென்ற போது, மணல் பரப்பில் இருந்த எலும்புக்கூடு போன்ற உருவத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து நியூ யார்க் போஸ்ட் வெளியிட்டுள்ள தகவல்களில் கடந்த மார்ச் 10ம் திகதி பவுலா மற்றும் டேவ் ரீகன் இங்கிலாந்தின் கென்ட் பகுதியில் உள்ள கடற்கரைக்குச் சென்றுள்ளனர்.அங்கு தேவதை போன்ற வடிவில் எலும்புக்கூடு ஒன்று இருப்பதாகக் கண்டனர்.
அவ்வுருவம் ஒரு மீனின் வால் மற்றும் வேற்றுக்கிரகவாசி போன்ற உடல் மற்றும் தலையுடன் காட்சியளித்தது. அதனைப் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட அது வைரலானது.
கடற்பகுதிகயில் காணப்பட்ட விசித்திர தோற்றமுடைய பொருள் பொதுமக்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது.

