கிளிநொச்சி தருமபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உழவனூர் மற்றும் கல்லாறு பகுதிகளில் அனுமதி இன்றி மணல்யார் அமைத்து மணல் வியாபாரத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் கல்லாறு பகுதியில் பொது இடத்தில் மணல் சேகரித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் இருந்த மணலும் பொலிஸாரால் பறி முதல் செய்யப்பட்டுள்ளதுடன் இச்சம்பவத்தின் போது 28 கியூப் மணல் பறி முதல் செய்யப்பட்டுள்ளதுடன் அதே பகுதியில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி மணலை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்றும் பொலிஸால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் அதன் சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சாரதி பொலிஸ் பினையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் தடையப் பொருட்களை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

