வடக்கு, கிழக்கு மக்களின் காணி பிரச்சினை தொடர்பாக கொழும்பு பொரளை மண்டபத்தில் தென்னிலங்கை ஊடகங்களிடம் வட மாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தால் இன்று(20) எடுத்துக் கூறப்பட்டது.
முக்கியமாக யாழ் காங்கேசன்துறை தையிட்டியில் அமைந்துள்ள மக்களின் காணிகளை வலுக்கட்டாயமாக அபகரித்து பெளத்த மதம் என்ற போர்வையில் அமைக்கப்பட்ட திஸ்ச விகாரை சட்டவிரோதமாக அமைக்கப்பட்டதென்பதனை ஆதார பூர்வமாக சகல ஆவணங்களுடனும், காணிக்கான நிரந்தர உரிமை பத்திரத்துடன் வருகை தந்த காணி உரிமையாளர்களால் தென்னிலங்கை ஊடகங்களுக்கு மிக தெளிவாக எடுத்துக் கூறப்பட்டது.
1921ம் ஆண்டு தொடக்கம் குறித்த காணிக்கான ஆவணங்களை தம்வசம் மக்கள் வைத்திருப்பதுடன், 16 பேருக்கு சொந்தமான குறித்த காணியின் உண்மை நிலையை தென்னிலங்கை மக்களுக்கும், ஊடகங்களுக்கும் உறுதியாக வழங்கப்பட்டது.
காணி அமைச்சரை சந்தித்து மேலும் கலந்துரையாடுவதற்காக வடமாகாண காணிக்கான மக்கள் உரிமை இயக்கம் பத்தரமுல்லை செல்லவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.