மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு மூன்று புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
அதன்படி, மேல் நீதிமன்ற நீதிபதிகளான அன்னலிங்கம் பிரேமசங்கர், டபிள்யூ.கே.எஸ்.யு. பிரேமசந்திர, கே. பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்குப் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ADVERTISEMENT
இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.

