சிவனடிபாத மலை தொடர் வனப் பகுதியில் இன்று 4 ம் திகதி சட்டவிரோதமான முறையில் மரங்கள் வெட்டிய இருவர் நல்லதண்ணி வனத்துறை அதிகாரி ரத்நாயக்க மற்றும் சில அதிகாரிகளின் சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது சிவனடி பாத மலை பருவகாலம் என்பதால் சிறு சிறு வர்த்தக நிலையங்கள் அமைக்க சட்ட விரோதமான முறையில் மரங்கள் வெட்டிய நல்லதண்ணி பகுதியில் உள்ள சுப்பிரமணியம் இந்திரன் வயது 37 சுப்பிரமணியம் விஜயகுமார் வயது 35 ஆகிய இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர் என நல்லதண்ணி வனத்துறை அதிகாரி ரத்நாயக்க தெரிவித்தார்.
ADVERTISEMENT


