தென்னாபிரிக்காவில் மூன்று புதிய குரங்கம்மை பாதிப்புக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தென்னாபிரிக்க சுகாதாரத் துறையின் செய்தித் தொடர்பாளர் இது தொடர்பாக கூறுகையில் ,
இந்த மூன்று புதிய குரங்கம்மை பாதிப்புக்களும் கௌதெங் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு ஆரம்பித்ததிலிருந்து இந்த நோயின் பாதிப்புக்கள் முதல் முறையாகவே கண்டறியப்பட்டுள்ளது . என அவர் கூறியுள்ளார்.
இதில், கொங்கோ மற்றும் உகண்டா ஆகிய நாடுகளில் பரவி வரும் கிளேடு I எம்பாக்ஸ் வைரஸின் பாதிப்பானது, உகண்டா நாட்டிற்கு சென்று திரும்பிய 30 வயது ஆண் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு குரங்கம்மை நோயின் பரவுதலைக் கண்டறியும் குழுவினர் மேற்கொண்ட சோதனையில் 27 வயது ஆண் மற்றும் 30 வயது பெண் ஆகிய இருவருக்கு இந்த நோயின் பாதிப்பு ஏற்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.