மலையகத்துக்கான தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இங்குருஓயா – கலபொட பகுதிக்கு இடையில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததாலும், ஹாலிஎலவிற்கும் பதுளைக்கும் இடையிலான ரயில் பாதையில் மண் மேடு சரிந்ததாலும் தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
தடைகளை அகற்றும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டதாக, தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.