தமிழின அழிப்புக்குக் காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
இதற்குக் காரணமானவர்களைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்தால் மாத்திரமே தமிழ் மக்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என்று நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் வலியுறுத்தினார்.
இதற்குக் காரணமானவர்கள் தற்போது சமூகத்தில் சுதந்திரமாக நடமாடுகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
ADVERTISEMENT
சிறந்ததொரு அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
எல்லை நிர்ணயத்தில் பாகுபாடு காட்டப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.