கம்பஹா, மினுவாங்கொடை, பத்தன்டுவன பிரதேசத்தில் இன்று புதன்கிழமை (26) துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
36 வயதுடைய நபரொருவர் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.