முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர் லீக் கிரிக்கெட் போட்டி இன்று இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி, மும்பையில் நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை – இந்தியா அணிகள் மோதவுள்ளன. இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ள இந்தப் போட்டியில் இலங்கை அணிக்கு குமார சங்கக்கார அணித்தலைவராகவும் இந்திய கிரிக்கெட் அணிக்கு சச்சின் டெண்டுல்கர் அணித்தலைவராகவும் கலமிறங்கவுள்ளனர்.
இந்தப் போட்டி மார்ச் 16 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.