உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் தமது கட்டுப்பணத்தை மீள பெறமுடியும் என தேர்தல் திணைக்களம் அறிவித்த நிலையில் கட்சிகள் தமது கட்டுப்பணத்தை மீள பெற்று வருகின்றன.
அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் (தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி)கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று பிரதேச சபைக்காக செலுத்திய பணத்தை பெற்றுக்கொள்வதற்கான பற்றுச்சீட்டை கிளிநொச்சி தேர்தல் அலுவலகத்தில் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தங்கவேல் ஜெகதீஸ்வரன் சமர்ப்பித்தார்.