இராவணா கொட விஜயபாகு முகாமைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவர் உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் உயிரிழந்தார்.
இச் சம்பவம் நேற்று மாலை மூன்று மணிக்கு இடம்பெற்றுள்ளது.
விடுமுறையில் தனது இல்லத்திற்கு வந்து விவசாய பணியில் ஈடுபட்டு வந்த நேரம் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் இராவணா கொட பகுதியைச் சேர்ந்த கொட்டாஹேன பிட்டிய ஜயந்த ஜனித் ஹேரத் எனும் திருமணம் முடித்த 29 வயதுடையவர் ஆவார்.
இவரது சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் உள்ள பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள பத்தனை பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த நபரான சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை இன்று 21 டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு பின்னர் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது என பத்தனை பொலிசார் தெரிவித்தனர்.

