• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 10, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தீச்சட்டி ஏந்தியவாறு போராட்டம்.!(சிறப்பு இணைப்பு)

Mathavi by Mathavi
February 20, 2025
in இலங்கை செய்திகள், கிளிநொச்சி செய்திகள்
0 0
0
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தீச்சட்டி ஏந்தியவாறு போராட்டம்.!(சிறப்பு இணைப்பு)
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் ஆரம்பித்து இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவடைந்து ஒன்பதாவது ஆண்டு தொடர்கின்ற நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து கிளிநொச்சி மீனாட்சி அம்மன் ஆலய முன்றல் நோக்கி தீச்சட்டி ஏந்தியவாறு பேரணியாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க தலைவி யோ.கனகரஞ்சினி

ADVERTISEMENT

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை எம்மிடம் ஒப்படையுங்கள் என கோரியும் அல்லது அவர்கள் எங்கே என சிங்கள பேரினவாத அரசிடம் பலமுறை கேட்டும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை எனவே நாம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரி 2017-பெப்ரவரி 20 ம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டமானது வடகிழக்கு என விரிவுபடுத்தப்பட்டது.

2017 பெப்பரவரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் எட்டு வருடமாக அதாவது இன்றுடன் 2920 நாட்களைக் கடந்து தொடர்கின்றது. 2009 மே 18 ல் முள்ளிவாய்க்காலில் போர் மொளனிக்கப்பட்டு 16 ஆண்டுகள் ஆகின்றன.

இன்றும் இனப் படு கொலை தொடர்ந்த வண்ணம் உள்ளன ஆனால் இலங்கையில் ஜனாதிபதிகளும் ஆட்சியாளர்களும் மாறினாலும் தொடர்ந்தும் இனப் படு கொலைக்கான நீதி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி. நேரடியாக படையினர்களிடம் சாட்சியங்களுடன் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான நீதி இதுவரை கிடைக்கவில்லை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தினராகிய நாம் 2017 தொடக்கம் இன்று வரையும் உள்நாட்டில் பல போராட்டங்களை நடத்தினோம். இலங்கை அரசின் நீதித் துறையில் நம்பிக்கையில்லை என்ற ஒரு காரணத்தினால் நாம் சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என பல தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகின்றோம்.

சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு மகஜர்களையும் அனுப்பினோம். நேரடியாக ஜெனிவாவில் உள்ள ஐ. நா மனித உரிமை ஆணைக் குழுவிலும் நேரடியாக சென்று ஆவணங்களை ஆதாரத்துடன் கையளித்தோம். ஆனால் இதுவரை எமக்கான நீதி கிடைக்கவில்லை. 2015 ஆட்சியில் இருந்த நல்லாட்சிகாலம் என சொல்லப்படும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019 ல் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ, 2022 ல் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க வரையான சகல அரசாங்கங்களும் எம்மை ஏமாற்றி உள்ளன.

தேசிய மக்கள் சக்தி மூலம் தற்போதய புதிய ஜனாதிபதியாக கடந்த 2024 செப்ரெம்பர் பதவியேற்ற அனுர குமார திசநாயக்க 2024 நவம்பர் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும் எந்தவொரு நல்லெண்ணமும் அவர்களின் செயலில் தென்படவில்லை மாறாக புலனாய்வாளர்களை ஏவிவிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மாரை கண்காணிப்பதுடன் அவர்களை சுதந்திரமாக தமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கேட்டு நடத்தும் கவனயீர்ப்பு போராட்டங்களில் கலந்து கொள்ள விடாமல் நீதிமன்ற தடை உத்தரவுகளை கொடுத்து ஐனநாயக வழிப் போராட்டத்தை அடக்கி ஒடுக்கி தடுக்கும் அடாவடிச் செயல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை ஜனாதிபதிகளின் பெயர்கள் மாறியுள்ளன செயல்கள் மாறவில்லை. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடைய பெற்றோர்கள் இதுவரை 300க்கும் மேற்பட்ட தமது உறவுகளின் உண்மை நிலையறியாது வேதனையுடன் உயிரிழந்த பரிதாபங்கள் வடகிழக்கில் நடந்துள்ளன. எங்கள் வேதனைகளையும், வலிகளையும், உண்மைகளையும் இலங்கை அரசு புரியவில்லை. அதேபோல் சர்வதேசமும் புரிய வில்லை என்பதையே கடந்த எட்டு வருங்களாக நாங்கள் கண்ட உண்மை.

அரசுகள் மாறும் போது எல்லா சர்வதேச இராஜதந்திரிகளும் நாடுகளின் தலைவர்களும் ஏன் ஐ.நா சபைகளும் கூட இலங்கை அரசை காப்பாற்றும் ஒரு செயலாக கால அவகாசங்களை வழங்கி கால நீடிப்பை செய்து வருவதை நாம் எட்டு வருடங்களாக அவதானித்து வந்துள்ளோம் என்ற உண்மையை கவலையுடனும், கண்ணீருடனும், மனவேதனையடனும் இந்த எட்டு ஆண்டு நிறைவில் பதிவு செய்கின்றோம். எனவே இந்த உண்மைகளை உணர்ந்து இனியும் எம்மை ஏமாற்றாமல் எங்கள் உணர்வுகளை மதித்து சர்வதேச நீதி கிடைக்க ஆவன செய்யுமாறு சர்வதேசத்திடம் வேண்டுகின்றோம். என தெரிவித்தார்.

Mathavi

Mathavi

Related Posts

அரிசி மாபியாவை கூட்டுறவுத்துறையால் மாத்திரமே கட்டுப்படுத்துவதற்கு முடியும்.!

அரிசி மாபியாவை கூட்டுறவுத்துறையால் மாத்திரமே கட்டுப்படுத்துவதற்கு முடியும்.!

by Mathavi
May 10, 2025
0

அரிசி மாபியாவை கூட்டுறவுத்துறையால் மாத்திரமே கட்டுப்படுத்துவதற்கு முடியும். தனியார் துறையினர் இலாபத்தை மாத்திரமே அடிப்படையாகக் கொண்டே செயற்படுவர். ஆனால் கூட்டுறவுத்துறை சேவையை அடிப்படையாகக் கொண்டு சிறியதொரு இலாபத்துடன்...

மன்னாரில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்குக் கண்ணாடி வழங்கல்.!

மன்னாரில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்குக் கண்ணாடி வழங்கல்.!

by Mathavi
May 10, 2025
0

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள துள்ளு குடியிருப்பு பகுதியில் இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம்...

உயிர்நீர்த்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்த அனைவரும் முன்வர வேண்டும்.!

உயிர்நீர்த்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்த அனைவரும் முன்வர வேண்டும்.!

by Mathavi
May 10, 2025
0

வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், தமது கைகளினால் உறவுகளை வழங்கிய உறவுகளுக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது மிகவும் அவசியமான விடயமாகும். எதிர்வரும் மே 12 தொடக்கம் 18 வரையில்...

செப்புக்கம்பி மற்றும் தொலைபேசிக் கேபில்களுடன் சந்தேக நபர்கள் கைது.!

செப்புக்கம்பி மற்றும் தொலைபேசிக் கேபில்களுடன் சந்தேக நபர்கள் கைது.!

by Mathavi
May 10, 2025
0

மன்னார் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இன்று (10) மன்னார் ஜிம்ரோ நகர்ப் பகுதியில் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 17 கிலோ 200 கிராம்...

சூழலியம் என்பது உலகை உய்விக்க வந்த பெருங்கோட்பாடு.!

சூழலியம் என்பது உலகை உய்விக்க வந்த பெருங்கோட்பாடு.!

by Mathavi
May 10, 2025
0

கம்யூனிசம், சோசலிசம், பெரியாரியம் என்று காலத்துக்குக் காலம் மனுக்குலத்தை வழிநடத்தவெனக் கோட்பாடுகள் உருவாகி வந்துள்ளன. தற்போது தாண்டி ஒட்டுமொத்த உலகையுமே உய்விக்க வந்த பெருங்கோட்பாடாகச் சூழலியம் உருவெடுத்துள்ளது....

தேர்தலின் முடிவுகள் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுடன் பயணிக்கும் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.!

தேர்தலின் முடிவுகள் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுடன் பயணிக்கும் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.!

by Mathavi
May 10, 2025
0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் முடிவுகள் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுடன் பயணிக்கும் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதுடன் அதற்கு கிடைத்த ஆணையாகவும் அமையுமென நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்...

சந்தேகத்திற்கிடமான முறையில் சிறுமி ஒருவர் உயிரிழப்பு.!

சந்தேகத்திற்கிடமான முறையில் சிறுமி ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 10, 2025
0

பதுளை பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடகம பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (09) இரவு சந்தேகத்திற்கிடமான முறையில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். பசறை -...

தமிழர் காணிகளுக்கு காலக்கெடு கொடுத்து அரச உரிமை கோரி அதில் குடியேற்றங்களை அமைக்கப் போகிறார்கள்.!

தமிழர் காணிகளுக்கு காலக்கெடு கொடுத்து அரச உரிமை கோரி அதில் குடியேற்றங்களை அமைக்கப் போகிறார்கள்.!

by Mathavi
May 10, 2025
0

தமிழர் காணி சம்மந்தப்பட்ட விடயத்தை நியாயம் இல்லாமல் 3 மாத காலக்கெடு வழங்கி அரச உரிமை கோர முயல்வது அந்த காணிகளை இயற்கை நீதிக்கு புறம்பாக பறித்து...

கனடாவில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இலங்கைத் தமிழ் இளைஞன் உயிரிழப்பு.!

கனடாவில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இலங்கைத் தமிழ் இளைஞன் உயிரிழப்பு.!

by Mathavi
May 10, 2025
0

கனடாவில் நண்பர்களுடன் சென்ற இலங்கைத் தமிழ் இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். உயிரிழந்தவர் ஒன்டாரியோ ஸ்காபுரோ பகுதியை சேர்ந்த 19 வயதான ரதுஷன்...

Load More
Next Post
யாழில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது.!

யாழில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது.!

விபத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு.!

விபத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு.!

நந்திக்கடலில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டவர்கள் கைது.!

நந்திக்கடலில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டவர்கள் கைது.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி