வவுனியா மன்னார் வீதியில் நேற்று இடம்பெற்ற உந்துருளி விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்,
நேற்று மாலை குறித்த நபரும் மற்றொருவரும் பறயனாலங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி உந்துருளியில் சென்றுள்ளனர்.
இதன்போது கட்டுப்பாட்டை இழந்த உந்துருளி வீதியின் அருகில் இருந்த மின்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.
விபத்தில் உந்துருளியை செலுத்திச்சென்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துந்துள்ளதுடன் அதில் பயணித்த மற்றொருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் அனுராதபுரம் பகுதியை சேர்ந்த நிமல் வயது 35 என்ற நபரே உயிரிழந்துள்ளார்.
விபத்துச் சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
