பதுளை, கந்தகெட்டிய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கலஉட பொலிஸ் பிரிவின் நாரங்கல தோட்டப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (07) மாலை புதையல் தோண்டிய சந்தேகத்தின் பேரில் கலஉட பொலிஸாரால் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் நுவரெலியா, ஹாலிஎல, பூண்டுலோயா மற்றும் பிசோபண்டாரபுர பகுதிகளைச் சேர்ந்த 20, 45,53, 44 வயதுடையவர்களாவர்.
இவர்களிடம் இருந்து புதையல் தோண்டப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.