இலங்கையில் அரசு சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக ‘GovPay’ வசதியை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிகழ்வு பெப்ரவரி 7 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறும்.
இது அரசு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் பரிவர்த்தனைகளை நெறிப்படுத்தி நவீனமயமாக்கும் என்றும், பாதுகாப்பான மற்றும் திறமையான டிஜிட்டல் அமைப்பு மூலம் தடையற்ற பரிவர்த்தனைகளை செயல்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.