இலங்கைக் கடற்பரப்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த 8 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் ஒரு படகில் யாழ்ப்பாணம் கடற்பரப்புக்குள் ஊடுருவி மீன்பிடியில் ஈடுபட்ட சமயமே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று காலை யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
ADVERTISEMENT
அதன்பின்னர் அவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்று கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.