19 வயது மாணவி ஒருவரை வற்புறுத்தி மதுபானம் பருகச் செய்த குற்றச்சாட்டில் தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் பெல்மதுளை பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
மதுபானத்தை அருந்திய குறித்த மாணவி கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெல்மதுளை நகரில் கார் ஒன்றில் வந்து இறங்கிய 19 வயது மாணவி தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரைக் குழுவொன்று விசாரித்தது.
இதன்போது அவர் மதுபானம் அருந்தியிருந்ததாகக் கண்டறியப்பட்டது.
இந்தநிலையில், காருக்குள் இருந்த மற்றைய நபரும் மதுபோதையில் இருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
குறித்த குழு மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் அந்த நபர் மாணவியின் தனியார் வகுப்பு ஆசிரியர் எனவும், அவர் மாணவியை வற்புறுத்தி மதுபானம் பருகச் செய்தார் எனவும் தெரியவந்தது.
இதனையடுத்து, அந்த நபரை அங்கிருந்த குழுவினர் தாக்கியதுடன், அவரைப் பெல்மதுளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.