• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 12, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

இலங்கையின் பொருளாதாரம் மிகவும் நலிவடைந்த நிலையில் இருக்கின்றது.!

Mathavi by Mathavi
January 8, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
இலங்கையின் பொருளாதாரம் மிகவும் நலிவடைந்த நிலையில் இருக்கின்றது.!
Share on FacebookShare on Twitter

இலங்கையின் பொருளாதாரம் மிகவும் நலிவடைந்த நிலையில் இருக்கின்றது. சரியான முறையிலே சர்வதேச உறவுகளை பேணாமலும், முதலீடுகளை சரியான திட்டங்களிலே முதலிடாமலும் இந்த நாடு மிகவும் வங்குரோத்தான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற அமர்வு நேற்று இடம்பெற்றபோது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தொடர்ந்தும் தனதுரையில் தெரிவித்தவை வருமாறு,

2024 ஆம் ஆண்டு நிதி பொருளாதார அபிவிருத்தி சம்பந்தமான மத்திய ஆண்டு நிதிநிலை அறிக்கை சம்பந்தமாக கலந்துரையாடுவதற்காக அந்த சந்தர்ப்பத்தை தந்தற்காக பிரதி சபாநாயகர் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

ADVERTISEMENT

இலங்கையை கட்டி எழுப்ப வேண்டிய கடமைப்பாடுகள் எங்கள் அனைவருக்கும் இருக்கின்றது. இலங்கையின் பொருளாதாரம் மிகவும் நலிவடைந்த நிலையில் இருக்கின்றது. சரியான முறையிலே சர்வதேச உறவுகளை பேணாமலும், முதலீடுகளை சரியான திட்டங்களிலே முதலிடாமலும் இந்த நாடு மிகவும் வங்குரோத்தான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றது. அது மட்டுமல்ல இலங்கையிலே 2024 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை பார்த்தால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி கிட்டத்தட்ட ஐந்து வீதமாக காணப்பட்டது. அதேபோல் இலங்கையில் மிகவும் முக்கியமாக இருக்கின்ற துறையான விவசாயத்துறையின் வளர்ச்சி வீதமானது 1.4 வீதமாக காணப்பட்டது.

அதேபோல், இன்டஸ்றீ கிரவுத் 11.4% ஆக இருந்தது. சேர்விஸ் கிரவுத் 2.6 வீதமாக காணப்பட்டது. பண வீக்கமானது எதிர்க்கணியத்திலே 0.5 % ஆக காணப்பட்டது. மற்றும், உணவு வீக்கமானது 3.3 வீதமாகவும் ஏற்றுமதி 6.1 வீதமாகவும் அதிகரித்து காணப்பட்டது. வெளிநாட்டு வருமானம் 11 வீதமாக காணப்பட்டது, சுற்றுலாத் துறையை நோக்கும்போது, 66.1 வீதமாகவும் சுற்றுலா பயணிகள் வருகை 50% ஆகவும் காணப்பட்டது.

அரச நிதி முகாமைத்துவம் 41.6% ஆக காணப்பட்டது. இங்கே குறிப்பாகச் சொல்லப்போனால் இந்த வீதங்கள் அதிகரித்தும் மறைப்பெறுமதியிலும் நேர்ப்பெறுமதியிலும் காணப்பட்டாலும் அப்போது இந்த நாடு ஸ்திரத்தன்மை அற்ற நிலையிலே காணப்படவில்லை.

இதற்கு இந்த நாட்டிலே இருக்கின்ற பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைக்கின்ற வடிவமைப்பாளர்களினாலே இப்போதுள்ள ஆட்சியாளர்கள் சரியாக திட்டமிடப்பட்ட முறையிலே பொருளாதாரக் கொள்கைகளை வகுத்து சரியான வழிகாட்டல்களின் ஊடாக, வருகின்ற நிதிகளை சரியான முறையிலே முகாமைத்துவப்படுத்துகின்ற பொழுதுதான் இந்த நாட்டை நாங்கள் சிறப்பாக கட்டியெழுப்ப முடியும்.

உதாரணமாக விவசாயத் துறை வளர்ச்சி 1.4 % ஆக காணப்பட்டிருந்தது. விவசாயத்துறையில் இந்த வீதம் என்பது அதிகரித்து இருந்தாலும் இன்று இந்த நாட்டிலே அரிசியை இறக்குமதி செய்கின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலைக்குள் நாங்கள் தள்ளப்பட்டு இருக்கின்றோம். எத்தனையோ வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களது விவசாயத்துறையை புதிய புதிய தொழில்நுட்பத்தின் மூலம் விவசாய உற்பத்திகளை அதிகரித்து வருகின்றார்கள். ஆனால் இலங்கை ஒரு விவசாய நாடாக இருந்தும் கூட சரியான முறையிலே தொழில்நுட்பங்களை உட்படுத்தாமல் செயற்திட்டங்களை சரியான முறையில் வகுக்காமல் அதற்கான வளங்களை ஒதுக்காமல் இருப்பதினால் தான் இன்று இந்த நாடு இன்னொரு நாட்டிலே அரிசித் தேவைக்காக, உணவுத் தேவைக்காக கையேந்துகின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றது.

ஆனால் இங்கு எத்தனையோ வளங்கள் இருக்கின்றன. விவசாயத்துறையை வளர்ச்சி அடையச் செய்வதற்கான முழு வளங்களும் இருக்கின்றது. அதேபோல் இந்த நாட்டை சுற்றி அதிகளவான கடல் வளங்கள் இருக்கின்றன. இந்த வளங்களை நாங்கள் சரியான முறையிலே பயன்படுத்துவதில்லை.

அண்மையிலே குறிப்பிட்ட ஆறு மாதத்துக்கு முதல் எங்களது அயல்நாடு, அயல்நாட்டினாலே ஜெமேக்காவிலே கடல் வளங்கள் சார்பான ஆய்வுகளை மேற்கொள்கின்ற ஐக்கியநாடுகள் சபையின் அந்த திட்டத்தின் கீழே ஜெமேக்காவில் இருக்கின்ற தலைமையகத்திலே எங்களது கடல், இங்கே, இந்த இலங்கையில் இருந்து நான் நினைக்கின்றேன் 1050 கிலோ மீட்டருக்கு அப்பாற்பட்டு காணப்படுகின்ற கடல் படுக்கையிலே அதிகளவான வளங்கள், மிகவும் பெறுமதியான வளங்கள் காணப்பட்டிருந்தது.

அந்த வளங்கள் நான் நினைக்கிறேன் எதிர்காலத்திலே இந்த உலகத்துக்கே தேவையான மிக அரிதான வளங்கள் இலங்கைக்கே சொந்தமான நிலப்பரப்பிலே, யுரேனியம் லித்தியம் போன்ற பெறுமதி வாய்ந்த வளங்கள் காணப்பட்டிருந்தது. அந்த வளங்களை ஆராய்ச்சி செய்வதற்காக பிற நாடுகளிலிருந்து வல்லரசுக்கள், பிற நாடுகளில் இருக்கின்ற பிராந்திய வல்லரசுக்கள் அதே போல் உலக வல்லரசுக்கள் அந்த இடத்தை ஆய்வு செய்து வருகிறார்கள்.

ஆனால் அந்த வளத்தை சரியான முறையிலே நாங்கள் பயன்படுத்துவோமானால் இந்த நாடு பொருளாதாரத்திலே செல்வச் செழிப்பிலே உச்சம் அடைகின்ற ஒரு நாடாக இருக்கும். இலங்கையில் இருந்து 1050 கிலோமீற்றர்க்கு அப்பாலும் அதேபோல் மாலைதீவிலே இருந்து 1375 கிலோமீற்றருக்கு அப்பாலும் அதேபோல் இந்தியாவிலிருந்து 1600 கிலோமீற்றருக்கு அப்பாலும் அந்த கனிய வளம் பரந்து காணப்படுகின்றது. அது திட்டுக்களாக காணப்படுகின்றது. கிட்டத்தட்ட 165 சதுர கிலோமீட்டர் பரப்பிலே அந்த திட்டுக்கள் காணப்படுகின்றது.

அந்த வளங்களை கொள்ளையடிப்பதற்காக, அந்த வளங்களை பெறுவதற்காக பல நாடுகள் பல தரப்பிலும் பல முயற்சிகளை செய்து கொண்டு வருகின்றார்கள். ஆனால் அண்மையிலே ஐக்கிய நாடுகள் சபையில், ஜெமேக்காவில் இருக்கின்ற அந்த தலைமை காரியாலயத்திலே அதற்கான விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது, ஆனால் ஐக்கிய நாடுகள் சபையானது, ஜெமேக்காவில் இருக்கின்ற அந்த தலைமையகமானது, அந்த மண் திட்டானது, வளங்களானது இலங்கைக்கு சொந்தமானது என்று குறிப்பிட்டு இருந்தது.

ஆகவே சரியான முறையிலே, சரியாக அந்த வளங்களை நாங்கள் பயன்படுத்துவோமானால் இலங்கைக்கு தேவையான அனைத்து பொருளாதார வசதிகளையும், அனைத்து செல்வங்களையும் நாங்கள் பெற்றுக்கொள்ளலாம். அதேபோல் இலங்கையை சுற்றி அதிகளவான வளங்கள் இருக்கின்றது. அந்த வளங்களை நாங்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

நாங்கள் விவசாயத்தை முறையாக பயன்படுத்த வேண்டும். அதுமட்டுமல்ல எங்களது பொருளாதாரத்திலே பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது யானையின் உள்வருகையாகும். யானை கிராமத்துக்குள்ளே வருகின்றபொழுது அதிகளவான மக்கள் தங்களது பொருளாதாரத்தை இழக்கின்றனர். எனவே முறையான திட்டமிடலின் மூலம் யானைகள் கிராமங்களுக்குள் வருவதை கட்டுப்படுத்துவதற்கு துறை சார்ந்தவர்களும் அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Thinakaran
398 681.3K
  • Videos
  • Playlists
  • நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.  | Thinakaran news
    நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. | Thinakaran news 1 week ago
  • இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news
    இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news 1 week ago
  • யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news
    யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news 1 week ago
  • 412 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 1 year ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      ராஜபக்சக்கள் கொள்ளையடித்த சொத்துக்களை அரசுடமையாக்குங்கள்..!

      ராஜபக்சக்கள் கொள்ளையடித்த சொத்துக்களை அரசுடமையாக்குங்கள்..!

      by Thamil
      May 11, 2025
      0

      ராஜபக்சக்கள் கொள்ளையடித்த சொத்துக்களை அரசுடமையாக்குமாறு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரியுள்ளார். டுபாயில் எமக்கு சொந்தமானது என கூறப்படும் மரியோட் ஹோட்டலை அரசுடமையாக்குமாறும்,...

      முள்ளிவாய்க்கால் தினத்தில் அஞ்சலி செய்து எங்களுக்கான தீர்வினை பெற்றுத்தர முன்வர வேண்டும்..!

      முள்ளிவாய்க்கால் தினத்தில் அஞ்சலி செய்து எங்களுக்கான தீர்வினை பெற்றுத்தர முன்வர வேண்டும்..!

      by Thamil
      May 11, 2025
      0

      "முள்ளிவாய்க்கால் இன அழிப்பு வாரமானது எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 18 ஆம் திகதி வரை வடக்கு கிழக்கில் வலிந்து...

      யாழ். கோப்பாய் வைத்தியசாலை ஊழியர் ஒருவர் உயிரிழப்பு..!

      யாழ். கோப்பாய் வைத்தியசாலை ஊழியர் ஒருவர் உயிரிழப்பு..!

      by Thamil
      May 11, 2025
      0

      கோப்பாய் வைத்தியசாலையில் பணிபுரியும் சிற்றூழியர் ஒருவர் இன்றைய தினம் வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார். நீர்வேலி - பூதர்மட ஒழுங்கை என்ற முகவரியைச் சேர்ந்த குணரத்தினம் குணாதரன் (வயது...

      யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணம்..!

      யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணம்..!

      by Thamil
      May 11, 2025
      0

      நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் திருமணமாகி ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் உறவினர்களின் வீட்டுக்கு சென்று திருமண விருந்து உண்டு விட்டு திரும்பிய கணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன்போது...

      வீதியை விட்டு விலகி பள்ளத்தாக்கில் விழுந்த கார் ; மூவர் படுகாயம்..!

      வீதியை விட்டு விலகி பள்ளத்தாக்கில் விழுந்த கார் ; மூவர் படுகாயம்..!

      by Thamil
      May 11, 2025
      0

      ஹட்டன் -கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை, கெரோலினா தோட்ட பகுதியில் இன்று (11) காலை ஒரு குடும்பத்தை ஏற்றிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி...

      இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் பற்றி ஜனாதிபதி வெளியிட்ட செய்தி..!

      இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் பற்றி ஜனாதிபதி வெளியிட்ட செய்தி..!

      by Thamil
      May 11, 2025
      0

      இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இடம்பெற்ற போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செய்தி வெளியிட்டுள்ளார். இந்த முடிவு இரு தரப்பிலும் அப்பாவி உயிர்களைக்...

      யாழில் ஆரம்பிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு..!

      யாழில் ஆரம்பிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு..!

      by Thamil
      May 11, 2025
      0

      தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எற்பாட்டில் தமிழின அழிப்பு வாரத்தினை முன்னிட்டு மே 18 முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் நிகழ்வானது நல்லூர் தியாக தீபம் நினைவிடம் முன்பாக...

      தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா உறுப்பினர்களுடன் தேர்தலுக்கு பின்னரான கலந்துரையாடல்.!

      தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா உறுப்பினர்களுடன் தேர்தலுக்கு பின்னரான கலந்துரையாடல்.!

      by Mathavi
      May 11, 2025
      0

      தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் இன்றையதினம் வவுனியாவில் நடைபெற்றது. தேர்தலுக்கு பின்னரான செயற்பாடுகள் தொடர்பாக சட்டத்தரணி மணிவண்ணன் தலைமையில்...

      யாழில் இடம்பெற்ற “பேறுகால உளநலம்” நூல் வெளியீடு..!

      யாழில் இடம்பெற்ற “பேறுகால உளநலம்” நூல் வெளியீடு..!

      by Thamil
      May 11, 2025
      0

      உலக அன்னையர் தினத்தினை முன்னிட்டு அரும்பு நிலையம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை இணைந்து வெளியிட்ட வைத்தியர் சிவசுப்பிரமணியம் சிவதாஸ் எழுதிய "பேறுகால உளநலம்" நூல் வெளியீடும்,...

      Load More
      Next Post
      பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்ளுக்கு சேவைப் பிராமணக் குறிப்பு

      பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்ளுக்கு சேவைப் பிராமணக் குறிப்பு

      தொல்பொருள் திணைக்கள பதாகைக்கு எதிராக போராட்டம்.!

      தொல்பொருள் திணைக்கள பதாகைக்கு எதிராக போராட்டம்.!

      காட்டினுள் மரையை வேட்டையாடிய சந்தேகநபர் கைது!

      காட்டினுள் மரையை வேட்டையாடிய சந்தேகநபர் கைது!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி