தியத்தலாவை – ஹப்புத்தளை ரயில் மார்க்கத்தில் 38 ஆவது ரயில் சுரங்கப் பாதைக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை (27) மாலை ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தியத்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை, தியத்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவரே உயிரிழந்தவர் ஆவார்.
ADVERTISEMENT
பதுளையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியே இவர் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை தியத்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.