கொங்கோவில் படகு விபத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளனர்.
வடகிழக்கு கொங்கோவின் புசிரா ஆற்றுப்பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கிறிஸ்மஸ் நிகழ்வொன்றில் கலந்துகொண்டுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தவர்களுடன் பயணித்துக் கொண்டிருந்த படகே விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் அதிகமானவர்கள் காணாமல்போயுள்ளனர் என அதிகாரிகளும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் தெரிவித்துள்ளனர்.
ADVERTISEMENT
20பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.