வவுனியா வைத்தியசாலையில் நாய் ஒன்று வாயு துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளது.
வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே நேற்று (19.12) இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் நடாத்தியுள்ளார்.
வைத்தியசாலையின் பிரேத அறையருக்கில் நின்ற நாய் மீதே பாதுகாப்பு உத்தியோகத்தர் தன்னிடம் இருந்த வாயு துப்பாக்கியை பயன்படுத்தி உள்ளதாக தெரியவருகிறது.
இதனால் காயமடைந்த நாய் இரத்தம் சிந்த இழுபட்டு சென்று வேலி ஓரமாக மரணித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் நாய் காப்பகம் ஒன்றை நடத்தி வருபவர் வைத்தியசாலை பணிப்பாளரிடம் இன்று (20.12) முறைப்பாடு செய்துள்ளார். இது குறித்த விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்ப்படும் என பணிப்பாளர் இதன்போது உறுதியளித்துள்ளார்.