வவுனியா சேமமடு குளத்தின் வான்பகுதியில் இருந்து அரசாங்க ஊழியர் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) கண்டுபிடிக்கப்பட்டது.
வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் அமைக்கப்பட்டுள்ள யானை வேலிகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த இளைஞனே உயிரிழந்தவர் ஆவார்.
குறித்த இளைஞன் நேற்று சனிக்கிழமை (14) மாலை சேமமடு குளத்தின் ஆற்றுப்பகுதிக்குச் சென்றிருந்தார். இந்நிலையில் நீண்டநேரமாகியதால் அவரை அவரது நண்பர்கள் தேடியுள்ளனர்.
ADVERTISEMENT
அவரது சடலம் இன்று காலை ஆற்றுப்பகுதியில் இருந்து இளைஞர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.