மகாவலி ஆற்றில் மிதந்த நிலையில் ஆணொருவர் இன்று செவ்வாய்க்கிழமை (10) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டி – ஹப்புகஸ்தலாவ பிரதான வீதியில் மல்லந்த பாலத்தின் கீழ் மகாவலி ஆற்றில் சடலம் ஒன்று மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த நாவலப்பிட்டி பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
40 முதல் 45 வயது மதிக்கத்தக்க நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனவும் சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தொடர்பில் நாவலப்பிட்டி நீதவான் பரிசோதனை மேற்கொண்ட பின்னர் சடலமானது பிரேதப் பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்படும் என நாவலப்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.